world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இஸ்ரேல் ராணுவம் வெளியேற நாட்கள் நீடிப்பு 

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணு வம் வெளியேறுவதற்கான  காலக்கெடுவை பிப்ரவரி 18 வரை நீட்டிக்க இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா  உறுதிப்படுத்தியுள் ளது.ஹிஸ்புல்லா -இஸ்ரேலுக்கு இடையேயான தற் காலிகமாக  போர்  நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படை யில்  60 நாட்களுக்குள் இஸ்ரேல் ராணுவம் லெபனான் எல்லைக்குள் இருந்து வெளியேற வேண்டும். ஆனால் தற்போது இந்த நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் ராணு வம் ஒப்பந்தத்தை மீறி 100க்கும் அதிகமான முறை லெப னானில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

உலக நாடுகளுக்கான நிதியை  நிறுத்தியது அமெரிக்கா 

சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க (USAID) நிதி உதவி என்ற பெயரில் பல நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த  பண உதவியை டொனால்டு டிரம்ப் நிறுத்தியுள்ளார். இதனால் இப்பண உதவியில் நேரடியாக பயனடைந்து வந்த வங்கதேசம் பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்க நிதியுதவியுடன் வங்கதே சத்தில் நடந்து வரும் அனைத்து விதமான கட்டுமானப் பணிகளும், உதவிகளும் உடனடியாக நிற்கும் நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து அரசியல் பதற்றத்தில் உள்ள  வங்கதேசத்தில் அமெரிக்காவின் தடையால் நிதி நெருக்கடியும் உருவாகியுள்ளது.

இஸ்ரேல் சிறையிலிருந்து   200 பாலஸ்தீனர்கள் விடுதலை 

ஹமாஸ் - இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டாவது முறை கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. ஹமாஸ் தரப்பில் இருந்து 4 இஸ்ரேல் பெண் ராணுவ வீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் சித்ரவதைக்கு உள்ளாகி வந்த பாலஸ்தீனர்களுள் 200 நபர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. இருவருக்கும் இடையேயான கைதிகள் பரிமாற்றத்திற்கு செஞ்சிலுவைச் சங்கம் உதவி வருகின்றது. 

யோஷித ராஜபக்சே இலங்கையை   விட்டு வெளியேறத் தடை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்சேவின் மகன் யோஷித ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. யோஷித ராஜ பக்சே மீதான பணமோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த வாரம் அவர்  கைது செய்யப்பட்டார். கைது செய் யப்பட்ட மறுதினமே அவருக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளுக்கு அவர் தப்பிவிடக்கூடாது என்பதற்காக இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்க தேர்தல் வாக்குறுதியின்  அடிப்படையில் ஊழல் குற்றச்சாட்டுகள் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.

புடின் - டிரம்ப் சந்திப்பு?  அமெரிக்காவின் பதில் வரவில்லை 

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கும் அமெரிக்க ஜனாதி பதி  டொனால்டு டிரம்புக்கும் இடையிலான  சந்திப்பு குறித்து அமெரிக்காவின் பதிலுக்காக காத்தி ருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரி வித்துள்ளது. இரு நாடுகளின்  ஜனாதிபதிகளும் சந்திக்க தயாராக இருப்பதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தனர். ஆனால் சந்திப்புகள் தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சந்திப்புக்கான தேதியை குறிக்க அமெரிக்காவிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் ரஷ்யாவிற்கு வரவில்லை என கூறப்பட்டுள்ளது.