world

img

நீடித்த வளர்ச்சி - சமூக உத்தரவாதம் - சூழலியல் பாதுகாப்பு - எஸ்.ஏ.மாணிக்கம்

ஹூன்னான் பிராந்திய கமிட்டியின் துணைச் செயலாளர் மற்றும் பிராந்திய அரசியல் மற்றும் சட்ட விவகாரக்குழுவின் செயலாளர் ஜோ ஜி  கூறுகிறார்: “நாட்டின் மொத்த நிலத்தில் ஆறில் ஒரு பங்கு உள்ள  ஹூன்னான் பிராந்தியத்தின் விளைநிலத்தில் தேசத்தின் மொத்த தானிய உற்பத்தியில் பத்தில் ஒரு பங்கினை உற்பத்தி செய்கிறோம். மேலும் மொத்த கோதுமையில் கால் பகுதி ஹூன்னான் பிராந்தியத்தில் விளைவிக்கப்படுகிறது. 10 கோடி மக்களுக்கான உணவுப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும்  நாட்டின் இதர பகுதிகளுக்கு  30 பில்லியன் கிலோ உணவு தானியங்களை ஏற்றுமதி செய்து வருகிறோம்.” 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹயுபே மாகாணத்தின் நிலைக்குழுஉறுப்பினர் ஹியு  ஜென்சாங் குறிப்பிடுகையில், “ஹியுபே மாகாணம்  உல கின் மிகப்பெரிய ஒளியியல் இழை உற்பத்தி  மையமாக வும் சீனாவின் மிகப் பெரிய ஒளியியல்  சாதனங்கள் உற்பத்தியையும், ஒளியியல் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான பிராந்தியமாகவும் வளர்ந்து வருகிறது.  இத்துடன் நாட்டின் வலுவான ஆட்டோமொபைல் தொழிலில் முன்னிலை வகிப்பதோடு   கடந்த ஆண்டு நாட்டின் மொத்த வருவாயில் (ஜிடிபி) 8 சதவிகிதத்தை எட்டி யிருக்கிறது. இதற்கு மத்தியில் புதிய ஆற்றல் வாகன தொழிற்துறையும் ஆண்டுக்கு 3 சதவீதமாக அதிகரித்து வருகிறது. மாகாணத்தின் திறமையினை பயன்படுத்தி வர்த்தகத்திற்கு சாதகமான சூழலை உருவாக்குவோம். தொழிற்சாலைகள் மத்தியில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக் களை கட்டமைத்து மேலும் அதிகப்படியான நிறுவனங்களை அறிமுகப்படுத்துவோம்” என்கிறார். 

குவாங்டாங் மாகாணத்தின் நிலைக்குழு உறுப்பினர் மற்றும் மாகாணத்தின்  துணை ஆளுநர் சாங் ஹியு தெரிவிக்கையில், “குவாங்டாங் மாகாணம் முழுமையான பலத்துடன் குவாங்டாங்- ஹாங்காங்- மக்காவ் கிரோட்டர் விரிகுடா அடிப்படைக் கட்டுமானத்தை ஊக்கப்படுத்துகிறது. கடல்பகுதியை பாதுகாப்பதும் அதன் வளத்தை பயன்படுத்தி கட்டமைப்பை உருவாக்குவதையும் சவாலாகவே செய்து வருகிறோம்” என்கிறார்.

கட்சியின் சோங்குயிங் நகரக்குழுவின் செயலாளர் மற்றும் நிலைக்குழு உறுப்பினர் லியோ லின், “மேற்கு சீனாவின் உயர்தர வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக செங்டு- சோங்கிங் இரண்டு நகரங் களின் வளங்களை ஒருங்கிணைத்து பொருளாதார மண்டல கட்டுமானம் ஒரு நல்ல தொடக்கத்தில் துவங்கி  கடந்த இரண்டு ஆண்டுகளில் உறுதியான முன்னேற்றத்தை அடைந்துள் ளது. இரண்டு நகரங்களும் உலகத்தரம் வாய்ந்த ஆட்டோ மொபைல் மற்றும் மின்னணு தகவல் தொழிற்துறை மையங்கள் ஆகும். மேற்கு சீனாவில் ஒரு விரிவான அறி வியல் மையமாக இந்தப் பிரதேசம் உருவாகியுள்ளது” என்கிறார்.

சிச்சுவான் மாகாணக் கமிட்டியின் நிலைக்குழு உறுப்பினர் ஜெங் லி, “மக்கள் சீனம் உருவான  காலத்தில் சிச்சுவான் மாகாணம் ஒரு சிறிய மூன்றாம் அடுக்கு கட்டமைப்பு கட்டத்தில்  இருந்தது. ஆனால் இப்போது நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களின் மையமாக வளர்ந்துள்ளது. சிச்சுவான் மாகாணத்தை உயர்தரத்திலான வளர்ச்சியடைந்த  கண்டுபிடிப்பு மையமாக வும்  பிரதான  உற்பத்தி மண்டலமாகவும் கட்டமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் மொத்த பொருளாதார உற்பத்தி கடந்த ஆண்டு 5.38 டிரில்லியன் யுவான் ( 744.38 பில்லியன் டாலர் - ரூ.61,75,200 கோடி டாலர்) என சாதனையடைந்துள்ளது” என பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சாங்டாங் பிராந்திய கமிட்டியின் நிலைக்குழு உறுப்பினர் பை யுகாங் - கூறுகையில், “மஞ்சள் நதியின் பாதுகாப்பையும் அமைதி யையும் உறுதிப்படுத்திடும்  பொறுப்பினையும், கடமையை யும் சாங்டாங் தன்னுடைய தோள் மேல் ஏற்றுக்கொண்டுள் ளது. நதியின் நீரின் அளவையும், தூய்மையையும் பாது காப்பதும் நதிக்கரையோரம் உள்ள மக்களின் வாழ்க்கைக்கும், வாழ்வாதாரத்திற்கும் மஞ்சள் நதியின் தொன்மையான கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும் உத்தரவாதமான பணிகளைச் செய்கிறது. மஞ்சள் நதிப் படுகையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த நவீன கண்டுபிடிப்புக்களுடன் புதிய வளர்ச்சிக்கான பாதையில் முன்னேறிவருகிறோம்” என்கிறார்.

குய்சௌ மாகாணக் குழுவின் நிலைக்குழு உறுப்பினர் லான் யோங்செங் : “குய்சௌ என்பது முதலாவது தேசிய விரிவான தரவுகள் பாதுகாப்பு (டிஜிட்டல் டேட்டா) மண்டலமாகும். மேலும் அதன் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்ந்து ஏழு  ஆண்டுகளாக நாட்டில் முதலிடத்தில் உள்ளது. டேட்டா  சேமிப்பு, கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்களை தீவிரமாக  விரிவுபடுத்து வோம். நாடு தழுவிய கணினி சக்தி ஆதரவு தளத்தை உருவாக்குவோம்” என உறுதிபடத் தெரிவிக்கிறார்.

யூனான் மாகாணக் குழுவின் துணை செய லாளர் ஷி யுகாங், “கடந்த டிசம்பர் மாதம்  பயன்பாட்டிற்கு வந்த சீனா - லாவோஸ் இரயில்வே சீன  மற்றும் லவோஸ் இடையே பரஸ்பரம் நன்மை பயக்கும்  ஒரு முக்கிய திட்டமாகும். இதுவரை 7.6 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் மற்றும் 8.69 மில்லியன் டன்களுக் கும் அதிகமான பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள் ளன. மேலும் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1.25 மில்லி யன் டன் பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. இது  இரயில்வே பாதையின் கூடுதல் உந்துசக்தியை தாண்டி யுள்ளது. இந்த ஆண்டின் எட்டு மாதங்களில் லவோஸ் நாட்டிற்கு செய்யப்பட்ட ஏற்றுமதியின் மதிப்பு 5 பில்லியன் யுவான் (691 மில்லியன் டாலர்- ரூபாய் மதிப்பில் 57ஆயிரத்து 353 கோடி)” என்கிறார்.

கட்சியின்  திபெத் சுயாட்சி பிராந்தியத்தின் செயல் துணைச் செயலாளர் சுவாங் யான், “திபெத் தனது நிலப்பரப்பில் பாதியை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிவப்பு  கோட்டின் கீழ் பட்டியலிட்டுள்ளது. மேலும் அதிக மாசு பாட்டை உருவாக்கும் மற்றும் அதிக ஆற்றல் மற்றும்  நீர் நுகர்வுக்கு வழிவகுக்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும் அல்லது திட்டத்திற்கும் அனுமதியை தடை செய்கிறது. மேலும் தற்காலிக பொருளாதார வளர்ச்சிக்காக சுற்றுச்சூழ லை ஒருபோதும் தியாகம் செய்யாது. தூய்மையான எரி சக்தி, சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் கலாச்சாரம் போன்ற துறையில் தொழில்களை மேம்படுத்துவதன் மூலமும், மலைகள், ஆறுகள் மற்றும் காடுகள் போன்ற சிறப்பு சுற்றுச் சூழல் அம்சங்களை உள்ளடக்கிய முறையான பாதுகாப்பை  வழங்குவதன் மூலமும், திபெத் பசுமையான வளர்ச்சிப் பாதையை பின்பற்றுகிறது” என்றார் பெருமிதமாக.

ஷாங்காய் பிராந்தியக்குழுவின் நிலைக்குழு உறுப்பினர் மற்றும் பிராந்தியத்தின் துணை ஆளுநர் வாங் ஷியாவோ, “இணைப்பு மற்றும் சாலை திட்ட முன்முயற்சியின் கீழ் கட்டமைப்பில் தீவிரமாக பங்கேற்று வருகிறோம். உள்நாட்டு சீர்திருத்தம் மற்றும்  வெளிநாடுகளுக்கு திறப்பு ஆகியவற்றை துரிதப்படுத்து கிறது. ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மூலம் விவசாய  தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும்  பயிற்சி அடிப்படையில் ஆசியாவின் மிகப் பெரிய இரயில்வே  சரக்கு போக்குவரத்து முனையத்தைப்போல பல்வேறு விரிவான தளங்கள் கட்டமைக்கப்படுகிறது” என்கிறார்.

தைவான் உள்ளிட்ட 23 மாகாணங்களையும் திபெத் உட்பட 5 தன்னாட்சி பிராந்தியங்களையும் கொண்ட பல்வேறு மாறுபட்ட இயற்கை வளம், புவியியல் அமைப்பு, சமூக கட்டமைப்பு கொண்ட மக்கள் சீனம் தேசத்தின் ஆதாரங்களை மிகக்கவனமாக கையாண்டு பொருளாதார வளர்ச்சிக்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது என்பதைத் தான் மேற்கண்ட பிராந்தியங்களின் திட்டங்களிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. உலக சுற்றுச்சூழல் பற்றி எகிப்தில் காலநிலை உச்சிமாநாடு நவம்பர் 8 அன்று துவங்கி நடைபெற்று வரும் நிலையில், சோசலிச சீனா இயற்கை வளத்தை பாதுகாப்பது என்ற லட்சியத்துடன் மாசுகட்டுப்பாட்டிற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.