உணவு நெருக்கடி குறித்து ஐநாவின் அறிக்கை கடந்த மே 4-ல் வெளியிடப்பட்டது. 2021- ல் 53 வளரும் நாடுகளின் 19.3 கோடி மக்கள் மோசமான உணவு பாதுகாப்பின்மையில் சிக்கியிருப்பதாகவும் 2020ஐக் காட்டிலும் 4 கோடி பேர் அதிகம் பாதிப்பு எனவும் அறிக்கை கூறுகிறது. பாதிக்கப்பட்ட 19.3 கோடி பேரில் மூன்றில் இருவருக்கு மேல் அதாவது 13.9 கோடிப்பேர் உணவு பாதுகாப்பின்மையால் அவதிப்படுவதற்கு யுத்தங்களும் கலவரங்களுமே காரணம் எனவும் அறிக்கை கூறுகிறது . உணவுப் பாதுகாப்பின்மை, நாலு கோடிப் பேரை மிக மோசமாகப் பாதித்துள் ளது. இவர்களில் 5 லட்சம் பேர் ஆப்பிரிக்க நாடுகளிலும் ஏமனிலும் (மேற்காசிய நாடு) உள்ள மக்கள் கிட்டத்தட்ட பட்டினி சாவு நிலையை எட்டியுள்ளனர் .2020- ஐக் காட்டிலும் இந்த எண்ணிக்கை 2021ம் ஆண்டில் 4 மடங்கு கூடுதல்.
ஏன் உணவுப் பாதுகாப்பின்மை தீவிர மாகிறது? கொரோனா பெரும் தொற்று, தொடர்ந்த பொதுமுடக்கங்களால் , உணவு தானிய இறக்குமதியை சார்ந்து நின்ற நாடுகள் பாதித்தன. பருவநிலை மாற்றங்களால் ஏற்பட்ட உணவு உற்பத்தி வீழ்ச்சியும் ஒரு காரணம். ஆனால் மிக முக்கியமான காரணம், யுத்தங்களும் கலகங்களுமே. உக்ரைனில் இரண்டு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வரும் யுத்தத்தினால் உணவு சப்ளை பாதித்துள்ளது .ரஷ்யாவும், உக்ரைனும் கோதுமை ஏற்றுமதி செய்யும் பிரதான நாடுகள். காங்கோ ஜனநாயக குடியரசு, ஆப்கானிஸ்தான், ஏமன், சிரியா, சூடான், எத்தியோப்பியா, நைஜீரியா மற்றும் பல நாடுகளில் நடைபெறும் யுத்தங்களும் கலவரங்களும் கடும் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளன. ஏமனும் ஆப்கானிஸ்தானும் பாரம்பரியமாகவே உணவுப் பொருள்கள் இறக்குமதி சார்ந்த நாடுகள். சர்வதேச பொருளாதாரத் தடைகளால் இந் நாடு களுக்கு உணவு இறக்குமதி தடை செய்யப்படுகிறது. மடகாஸ்கர் போன்ற சில ஆப்பிரிக்க நாடுகளில் பருவ நிலை மாறு தல்களால் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நீடித்த உணவுப் பாதுகாப்பின்மை என்பது கடுமையாக போஷாக்கின்மையை ஏற்படுத்தும். வய தானவர்களையும் உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகளையும் பல நோய்கள் தாக்கும். குழந்தை இறப்பு விகிதம் உய ரும். சர்வதேச ரீதியிலான மனிதாபிமான அடிப்படையிலான உணவு உதவி 2017ஆம் ஆண்டில் இருந்தே விழுந்து வருவதாக அறிக்கை கூறுகிறது. சர்வதேச சமூகம் உடனடியாக அரசியல் உறுதிப்பாட்டுடன் தலையிட்டு அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்த முன்வர வேண்டும் என ஐநா அறிக்கை வலியுறுத்துகிறது. 2015 முதல் ஏமன் மீது சவூதி அரேபியா நடத்தி வரும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். அமெரிக்க ஏகாதி பத்தியம் தனது இராணுவ மேலாதிக்க கொள்கைகளை, சட்டவிரோதமாக மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். உலக அமைதி, உலக சமாதானம் நிலைநாட்ட அனைத்து நாடு களும் முன்வர வேண்டும். உலக மக்க ளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் திறன் இருந்தும், பசி, பட்டினியை-பட்டினிச் சாவு களை தடுத்து நிறுத்த முடியாதது அவல நிலை. ஏகாதிபத்திய யுத்தங்களால் கோடிக் கணக்கான ‘நாடற்ற அகதிகள்’ உருவாகி உணவுக்கே பரிதவிக்கும் நிலையில் உள்ளனர் .