world

img

பிரிட்டன் : ஸ்தம்பித்தது தபால்துறை

லண்டன், டிச.10- பிரிட்டனின் ராயல் தபால்துறை ஊழியர் கள் கிறிஸ்துமஸ் திருவிழாவிற்கு முன்ன தாக நடத்தத் திட்டமிட்டிருந்து போராட்டங்க ளைத் தொடங்கியுள்ளனர். பொருளாதார நெருக்கடியைச் சமாளிக் கும் வகையில் ஊழியர்களுக்கு ஊதி யத்தை உயர்த்துவது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று பிரிட்ட னின் அனைத்துத் துறை ஊழியர்களும் கோரி வருகிறார்கள். சில துறைகளில் பேச்சு வார்த்தை நடத்தினாலும் அதில் தீர்வு எட்டப் படவில்லை. பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்துவதற்குத் தேவையான முயற்சிகளை அரசுத்தரப்பில் எடுக்கவில்லை என்று ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. பேச்சுவார்த்தையில் தீர்வை வலியுறுத்தி கிறித்துமசுக்கு முன்பும், அதற்குப் பின்பும் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்க ளை நடத்த சங்கம் தீர்மானித்தது. கிறிஸ்து மசுக்கு முன்பாக டிசம்பர் 9, 11, 14, 15, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் நடத்தத் தீர்மானித்தனர். தற்போது வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். பிரிட்டன் வர லாற்றில் இவ்வளவு பெரிய அளவில் தபால்துறை ஊழியர்கள் பேரணி நடந்த தில்லை. தங்கள் வேலை நிறுத்தம் சேவை யைப் பாதிக்கும் என்பதால், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை முன்கூட்டியே அனுப்புங்கள் என்று வாடிக்கையாளர்க ளுக்கு தொழிற்சங்கம் கோரிக்கை வைத்தி ருக்கிறது.

போராட்டத்தில் எல்லைப்படை

எல்லைப்படை ஊழியர்களும் வேலை நிறுத்தம் செய்வதற்கு ஆதரவாக வாக்க ளித்திருக்கிறார்கள். பெரும்பாலான விமான நிலையங்களில் பாஸ்போர்ட்டை சோதனை செய்யும் இவர்களுக்குப் பதிலாக,  ராணுவத்தைக் களமிறக்க திட்டமிட்டி ருக்கிறார்கள். மேலும், புதிதாக 2 ஆயிரம் ஊழியர்களுக்கு பயிற்சியும் தரப்பட்டு வருகிறது. பல துறைகளும் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருவதால், ராணுவத்தினரில் பலர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் தெரிவித்துள் ளார்.