world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு பதிலடி : முகமது பாக்கர் எச்சரிக்கை 

ஈரான் நாடாளுமன்ற தலைவர் முகமது பாக்கர் கலிபாஃப், இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கண்டிப்பான பதிலடி கிடைக்கும் என எச்சரித்துள்ளார். அத்துமீறி தாக்குதல் நடத்திய இஸ்ரேலை கண்டித்த அண்டை நாடுகளுக்கு நன்றி தெரிவித்த அவர், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதையும்  வலியுறுத்தியுள்ளார். மேலும் காசா மற்றும் லெபனானில் அதிகரித்து வரும் இஸ்ரேலின் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த அமெரிக்கா தலையிட வேண்டுமென கூறியுள்ளார்.

டிராமி புயல் பாதிப்பு:  5 லட்சம் பேர் வெளியேற்றம்  

அக்டோபர் 25 முதல் பிலிப்பைன்ஸில் வீசி வரும் டிராமி புயலால் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி மரணமடைந்த  காணாமல் போன மக்களின் எண்ணிக்கை 100 யை கடந்துள்ளது. பல கிராமங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களை தேடும் பணி நடை பெறுவதாகவும் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் பிலிபைன்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

உள்ளாட்சி தேர்தலில் வெற்றித்தடம்  பதித்த தேசிய மக்கள் சக்தி 

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு பிறகு எல்பிடியா என்ற நகரின் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றித்தடம் பதித்துள்ளது தேசிய மக்களை முன்னணி. மொத்தமுள்ள 30 இடங்களில் ஜனதா விமுக்தி பெரமுனா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி  15 இடங்களை வென்றுள்ளது. எனினும் நகரசபை தலைமை ஏற்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் உள்ளது. நாடாளு மன்ற எதிரிக்கட்சியான சமகி ஜன பலவேகயா (SJB) மற்றும் பிற கட்சிகள் மீதமுள்ள இடங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘அணுமின் நிலையங்களுக்கு பாதிப்பு இல்லை’

ஈரான் மீது சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் அணுமின் நிலையங்கள் பாதிக்கப்படவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும் அங்கு பணியாற்றக்கூடிய ஆய்வா ளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் அவர் களுடைய முக்கியமான பணியைத் தொடர்கின்ற னர் எனவும் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸ்ஸி தெரிவித்துள்ளார். ஈரானின் ஏவுகணை, டிரோன் மற்றும் ராணுவத்தலங் களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.   

வடக்கு காசாவில் குண்டு வீசி  அப்பாவிகள் படுகொலை

ஞாயிற்றுக்கிழமையன்று  காசாவில் இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் 13 பாலஸ்தீனியர்கள் படுகொலையாகியுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா என்ற பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது விமானம் மூலம் குண்டு வீசியதில் 10 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ சேவைகளை இஸ்ரேல் ராணுவம் தடுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.