லண்டன், ஜூன் 7- சொந்தக் கட்சியில் தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோற்கடித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தனது அலுவலகத்தில் ஏராள மான விருந்து கொண்டாட்டங்களை அவர் நடத்தினார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந் தன. அதில் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆதா ரங்களும் வெளியாகின. இதனால், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை கள் எழுந்தன. பதவி விலகமாட்டேன் என்று போரிஸ் ஜான்சன் பிடிவாதமாக இருந்தார். சொந்தக் கட்சியிலேயே அந்தக் கோரிக்கைகள் இருந்தன. கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அவரது கட்சியின் 359 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததில், அவ ருக்கு ஆதரவாக 211 பேரும் எதிராக 148 பேரும் வாக்களித்தனர். இங்கு அவருக்கு எதிராக வாக்க ளித்தவர்கள் நாடாளுமன்றத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வாக்களித்தால், போரிஸ் ஜான்சன் பதவிக்கு ஆபத்து என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.