வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல்
டமாஸ்கஸ் : மேற்கு சிரியாவின் கடலோர நகரங்க ளில் உவங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் நாடாளுமன்ற தேர்த லுக்கான ஆலோசனையை வெளியிட்டுள்ளார். திங்கள் கிழமை அவர் கொடுத்த பேட்டியில் 2025 இறுதி அல்லது 2026 முதல் 6 மாதத்திற்குள் நாடாளு மன்ற தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாக தெரி வித்துள்ளார்.வங்க தேசத்தில் வன்முறைச் சூழல் அதிகரித்து உள்நாட்டு அமைதி மோசமாகியுள்ள சூழலில் நாடாளுமன்ற தேர்தலுக்கு 1 - 1.5 ஆண்டுகள் வரை ( அதிக காலம் ) ஆகும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை உறுதி - லூலா
பிரேசில் நாட்டில் 2022 இல் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி யில் ஈடுபட்டவர்களை கடுமையாக தண்டிப்பேன் என பிரேசில் ஜனாதிபதி லூலா உறுதியளித்துள் ளார். லூலா தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட தால் மருத்துவமனை யில் சிகிச்சை எடுத்து வந்தார். அறுவைச் சிகிச்சை முடிவடை ந்து திரும்பிய பின் அவர் கொடுத்த பேட் டியில் இதனை குறிப் பிட்டுள்ளார். பிரேசில் தேர்தலில் லூலா வென்ற பிறகு அவ்வாட்சியை கவிழ்க்க முன்னாள் ஜனாதிபதி போல்சானரோ முயற்சி செய்தார். இது குறித்தான விசாரணை அந்நாட்டில் தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி முகாம்
பாகிஸ்தானில் பரவிவரும் போலியோ நோயைத் தடுப்பதற்கான இறுதிக்கட்ட தடுப்பூசி முகாமை பாகிஸ்தான் சுகாதாரத்துறை நடத்தியுள்ளது. 45 லட்சம் குழந்தை களை போலியோ விலிருந்து பாதுகாப் பதற்காக தீவிரமான தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. 2024 ஜனவரி முதல் பாகிஸ்தானில் 63 பேர்களுக்கு போலி யோ தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் போலியோ பரவியுள்ளது. தற்போது காசாவிலும் போலியோ பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்கள் விசா இன்றி ரஷ்யா செல்லலாம்
இந்தியர்களுக்கு விசா இல்லாமல் அனுமதிக்கும் நடைமுறை அடுத்த ஆண்டு முதல் ரஷ்யாவில் அமல்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விசா இல்லாமல் இந்தியர்களை அனுமதிப்பதற்கான பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்க ளுக்கு முன் இரு நாடுகளுக்கும் இடையே நடை பெற்றது. ஏற்கனவே இ- விசா மூலம் இந்தியர்கள் ரஷ்யா செல்லும் நடைமுறை உள்ளது. 2023 இல் மட்டும் சுமார் 60 ஆயிரம் இந்தியர்கள் இ- விசா மூலம் ரஷ்யா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
துருக்கியில் இருந்து 400 பயணிகள் மீட்பு
விமானம் ரத்தானதால் துருக்கியில் சிக்கிக் கொண்ட 400 பயணிகள் இந்தியா அழைத்து வரப்பட்டனர். கடந்த டிசம்பர் 12 அன்று துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து 400 பயணி களுடன் இண்டிகோ விமானம் ஒன்று இந்தியா புறப்பட இருந்தது. திடீ ரென அந்த விமா னம் ரத்து செய்யப் பட்டது.அதனால் 400 பயணிகளும் துருக்கியில் சிக்கிக் கொண்டனர். தொடர் முயற்சிக்கு பின்னர் 200 பயணிகளுடன் இரண்டு கட்டமாக அப்பயணிகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டனர்.