பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை தாக்கினோம் : பாக் ராணுவம்
பாகிஸ்தான் ராணுவம் இரண்டு நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானின் 7 கிராமங்களில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த தெக்ரிக்-இ-தலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தான் எல்லை கிராமங்களில் பதுங்கியுள்ளதாக கிடைத்த உளவுத் தகவலின் படி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அந்த தாக்குதலில் 46 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆப்கன்- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
‘அமெரிக்கா தலையிடாமல் போரிட மாட்டோம்’
அமெரிக்கா நேரடியாக தடையீடு செய்யாமல் ரஷ்யா மீது போர் தொடுக்கமாட்டோம் என நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பின்லாந்து, லாத்வியா, எஸ்தோனியா ஆகிய ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன. மேலும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான தங்கள் ஆற்றலின் வரம்பை தங்கள் நாடுகள் அடைய போவதாகவும் அவை குறிப்பிட்டுள்ளன.உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவதற்கு பதிலாக வேறு எப்படியெல்லாம் போரை நீட்டிக்கலாம் என்றே சில ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.
குழந்தைக்காக காத்திருந்த பத்திரிகையாளர் படுகொலை
காசாவில் ஒரு மருத்துவமனைக்கு வெளியே ஒரு வாகனத்தில் 5 பத்திரிகையாளர்கள் இருந்தனர். அதில் ஒரு பத்திரிகையாளரின் மனைவிக்கு குழந்தை பிறக்க இருந்த நிலையில் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்தார். பத்திரிகையாளர் வாகனம் என குறிக்கும் வகையில் பிரஸ் என எழுதப்பட்டிருந்த போதும் இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி படுகொலையை அரங்கேற்றி யுள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது.
அஜர்பைஜான் விமானம் பறவை மோதியதால் விபத்தா?
அஜர்பைஜானில் இருந்து ரஷ்யா சென்ற விமானம் பறவை மோதியதால் விபத்துக்குள்ளானதாக ரஷ்யாவின் விமான கண்காணிப்பு அமைப்பகம் தெரிவித்துள்ளது. அதேபோல தரையிறங்குவதுக்கு முன்ன தாகவே ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. டிசம்பர் 25 அன்று அஜர்பை ஜானில் இருந்து ரஷ்யா சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் சுமார் 40க்கும் அதிகமான பயணிகள் பலியாகினர். நல்வாய்ப்பாக 20க்கும் அதிகமான பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவிய கல்லூரிகள்
இந்தியாவில் இருந்து கனடா வழியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற 260 கல்லூரிகள் உதவி வருவது தெரியவந்துள்ளது. பல ஏஜெண்டுகள் மூலமாக கனடாவில் உள்ள சுமார் 260 கல்லூரிகள் மூலம் மாணவர் விசா பெறப்படுகிறது. எல்லை வழியாக நடந்து சென்று அமெரிக்காவில் ஊடுருவுவதை விட மாணவர் விசா அமெரிக்காவிற்குள் நுழைய வசதியாக உள்ளது எனவும் இவ்வாறு பல நூறு பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேற வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது.
ஜப்பான் விமான சேவையில் சைபர் தாக்குதல்
ஜப்பான் ஏர்லைன்ஸ் மீது வியாழனன்று சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும் தாமதமானது. விமான பயணச்சீட்டு விற்பனையும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒட்டு மொத்த விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு விமானப் பயணிகள் முதல் சர்வதேச விமான பய ணிகள் வரை அனைவரும் கடுமையான சிரமத்திற் குள் தள்ளப்பட்டனர்.முன்னணி தொழில்நுட்ப பயன் பாடு உள்ள விமான சேவையிலேயே நடத்தப்பட்டுள்ள சைபர் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.