பெங்களூரு, பிப்.27- காஷ்மீர் வம்சாவளியைச் சேர்ந்தவர் நிதாஷா கவுல். உத்தரப்பிரதேசத்தில் பிறந்து வளர்ந்து லண்டனில் வசிக்கிறார். ஆர்.எஸ்.எஸ்-ஐ கடுமையாக விமர்சித்த அவரது எழுத்துக்கள், நாட்டில் ஜனநாயகம் சீர்குலை வதற்கு எதிரான சக்திவாய்ந்த தலையீடுகளாகஅமைந்தன. நிதாஷா கவுல் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் விமர்சன இடைநிலை ஆய்வுகள், சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் பேராசிரிய ராக உள்ளார். பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறையின் ஜனநாயக ஆய்வு மையத்தின் தலைவராகவும் நிதாஷா உள்ளார். அவர் தில்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியில் பி.ஏ பட்டமும், லண்டனில் உள்ள ஹல் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பட்டமும் பெற்றுள்ளார்.
விமான நிலையத்தில் 24 மணிநேரம் தடுத்து வைப்பு
‘அரசமைப்பும் தேசிய ஒருமைப்பாட்டு மாநாடும்’ என்ற தலைப்பில் பிப்.24, 25 ஆகிய இரண்டுநாள் மாநாட்டை கர்நாடகாவின் சமூக நலத்துறை நடத்தியது. இதில் பங்கேற்பதற்காக நிதாஷா கவுல் வந்தார். துறை மைச்சர் ஹெச்.சி.மகாதேவப்பா நிதாஷாவை நேரடியாக அழைத்திருந்தார். ஆனால், அவர் 24 மணிநேரம் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். ஒன்றிய அரசின் உத்தரவு எனவும், வேறு எதுவும் செய்ய முடியாது எனவும் புலம்பெயர்ந்த தனக்கு கிடைத்த ஒரே பதில் என்று நிதாஷா கூறுகிறார். “நான் இந்தியாவுக்கு எதிரானவள் அல்ல, ஜனநாயகத்தை ஆதரிப்பவள் சர்வாதிகாரத்துக்கு எதிரானவள் என்கிறார். எந்தவிதமான காரணமும் கூறாமலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுமின்றியும் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிதாஷா பின்னர் லண்டனுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.