தில்லி பகுதியில் சனியன்று காற்று தரக்குறியீடு 400-க்கு கீழ் குறைந்து காற்றின் தரம் ஓரளவு மேம்பட்டுள்ளது. திசை மாறுபாட்டால் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தகவல் தெரி வித்துள்ளார்.
உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கி யுள்ள தொழிலாளர்களை மீட்க கேரள மாநிலம் விதுரா பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞர் தாமாக முன் வந்துள்ளார். பட்டதாரி யான ரஞ்சித் சம்பளம் இல்லாமல் பல்வேறு இயற்கை பேரிடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
ஞானவாபி மசூதி வளாகத்தின் அறிவியல் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) வாரணாசி மாவட்ட நீதிமன்றம் மேலும் 10 நாட்கள் அவ காசம் அளித்துள்ளது.ஞானவாபி மசூதி வளாகத்தின் அறிவியல் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) வாரணாசி மாவட்ட நீதிமன்றம் மேலும் 10 நாட்கள் அவ காசம் அளித்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தை தொடர்ந்து தெலுங்கானா விலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
அருணாசல பிரதேசத்தின் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள டம்போரிஜோவில் நடைபெறும் ஆன்மீக நிகழ்விற்கு சென்ற கார் கம்லே மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்தது. காரில் இருந்த 4 பேரும் பலியானார்கள்.
தில்லி பகுதியின் அமன் விஹார் பகுதியில் கடந்த சில வாரங்களாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளியன்று இரவு 7 மணியளவில் 16 வயது சிறுவன் அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல், ஹெச்பி, ப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், பாக்ஸ்கான் உள்ளிட்ட 27 நிறுவனங்க ளுக்கு தகவல் தொழில்நுட்ப மென்பொருளுக் கான உற்பத்தி மற்றும் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் அனுமதி வழங் கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநி லம் லக்னோவில் விற்பனை பொருட்க ளுக்கு ஹலால் சான்றிதழ்களை வழங்கியதாக ஒரு நிறுவனம் மற்றும் மூன்று அமைப்புகளுக்கு எதி ராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலை யில், ஹலால் சான்றிதழ்களுடன் விற்பனை செய்யப்படும் தயாரிப்புகளுக்கு மாநிலம் முழு வதும் தடை விதிக்க உத்தரப்பிரதேச அரசு பரி சீலித்து வருவதாக தனியார் ஆங்கில நாளிதழுக்கு அம்மாநில அரசு செய்தித் தொடர்பாளர் தெரி வித்து உள்ளார்.