சின்வரை கொலை செய்துவிட்டதால் இஸ்ரேல் எதிர்ப்பு படைகளை தடுக்க முடியாது
யாகியா சின்வரின் படுகொலை ஆக்கிரமிப்பு எதிர்ப்பு படைகளுக்கு மிகப்பெரிய வலியை கொடுத்துள்ளதை மறுக்க முடியாது. ஆனால் இந்த காரணத்தால் இனப் படுகொலை ஆக்கி ரமிப்புகளை எதிர்க் கும் படைகளின் நட வடிக்கைகளை தடுத்து விட முடியாது. ஹமாஸ் போரில் தான் இருக்கிறது.தொடர்ந்து இருக் கும் என ஈரானின் உச்ச பட்ச தலைவர் அலி கமேனி தெரிவித்துள்ளார். கடந்த வியாழனன்று இஸ்ரேல் ராணுவம் யாகியா சின்வரை படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை உக்ரைன் நிறுத்தியது
உக்ரைன்-ரஷ்யா போர் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் போர்நிறுத்த பேச்சுவார்த்தையை உக்ரைன் அரசாங்கம் மேற் கொண்டு நடத்த விரும்பவில்லை நிறுத்திவிட்டது என புடின் விமர் சித்துள்ளார்.பிரிக்ஸ் உச்சி மாநாடு குறித்த பேட்டியின் போது போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டவே நாங்கள் விரும்பினோம். ஆனால் உக்ரைன் எங்களுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டது என ரஷ்ய ஜனாதிபதி புடின் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் இல்லம் மீது டிரோன் தாக்குதல்
சனிக்கிழமையன்று சிசேரியா கடற்கரையில் உள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் விடுமுறைக்கால ஓய்வு இல்லத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. லெபனா னில் இருந்து 3 டிரோ ன்கள் வந்ததாகவும் அதில் இரண்டை இஸ்ரேல் இடைமறி த்து விட்டது எனவும் மற்றொரு டிரோன் தாக்குதலில் எந்த பெரிய பாதிப்போ உயிரிழப்போ ஏற்பட வில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் ராணு வத்தலைவர் யாகியா சின்வர் படுகொலை செய்யப்பட்ட 2 நாட்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லெபனானில் உள்ள அமைதிப் படைக்கு மிக சவாலான காலம்
2006 ஆம் ஆண்டுக்குப்பிறகு தற்போது தான் லெபனானில் உள்ள ஐ.நா. இடைக்காலப் படையின் (UNIFIL) அமைதி காக்கும் படையினருக்கு மிக சவாலாக உள்ளது என அவ் வமைப்பின் செய்தித் தொடர்பா ளர் ஆண்ட்ரியா டெனெண்டி தெரி வித்துள்ளார். லெப னானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் மீது இஸ்ரேல் தரைவழித்தாக்குதலை துவங்கிய பிறகு அங்குள்ள ஐ.நா. அமைதிப்படை அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.