காசா,அக்.18- ஹமாஸ் அமைப்பின் ராணுவத் தலை வரான யாகியா சின்வரை வியாழனன்று இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் ராணு வத் தாக்குதல்கள் ஒரு ஆண்டை கடந்துள்ள சூழலில் பாலஸ்தீன ஆதரவு அமைப்பு தலை வர்களை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்து படுகொலை செய்து வருகிறது. ஈரானின் தலைநகரில் வைத்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத்தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கடந்த மாதம் படுகொலை செய்தது. அதன் பிறகு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, ஈரான் ராணுவத்தின் துணை தளபதி என வரிசையாக இஸ்ரேல் படு கொலை செய்தது. தற்போது வடக்கு காசாவில் இருந்த ஹமாஸ் அமைப்பின் ராணுவத் தலைவ ரான யாகியா சின்வரை மிகக்கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளது. அவர் பதுங்கி இருந்த கட்டிடத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தி கட்டிடத்தை முதலில் உருக்குலைய செய்தது.இந்த தாக்குதலில் அவருடன் இருந்த பாதுகாவலர்கள் படு கொலையாகினர். ஆனால் சின்வர் குறித்து தகவல் தெரியவில்லை. அதன் பிறகு படுகாயமடைந்திருந்த சின்வரை இஸ்ரேல் ராணுவம் ஸ்னைப்பர் மூலம் தலையில் சுட்டு படுகொலை செய்துள்ளது. இந்தப் படுகொலையை அரங்கேற்றிய பிறகு அது சின்வர் தானா என்பதை உறுதிப் படுத்துவதற்காக அவரது பல்லை எடுத்து டிஎன்ஏ ஆய்வின் மூலம் இஸ்ரேல் ராணு வம் உறுதிப்படுத்தியுள்ளது. சின்வர் கொலையானது உறுதி செய் யப்பட்ட பிறகு இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்ட், இது ஹமாஸ் அமைப்பு சரணடையும் நேரம் எனவும் அனைத்து பணயக்கைதிகளையும் விடு வித்து விட்டு சரணடையுங்கள் எனவும் பேட்டியளித்துள்ளார். அது மட்டுமின்றி போர்ச் சூழலை மேலும் பதற்றமாக்கும் வகையில் சின்வர் மரண மடையும் இறுதி நொடி டிரோன் காட்சிக ளையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள் ளது. அதில் டிரோன் தாக்குதலுக்கு பிறகு மிக மோசமாக சிதிலமடைந்த கட்டிடத்தில் ராணுவ உடை மற்றும் ஆயுதத்துடன் ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு நாற்காலி யில் அமர்ந்திருந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையிலும் கூட அங்கு பறந்து கொண்டி ருந்த இஸ்ரேலின் டிரோனை தனது கையில் இருந்த குச்சியை விட்டு எறிந்து தாக்க முயற்சித்தார். ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் படு கொலைக்கு பிறகு அதிகரித்த பதற்றத்தை தொடர்ந்து சில வாரங்களுக்கு முன் ஈரான் தனது தற்காப்பிற்காக இஸ்ரேல் மீது ஏவு கணை தாக்குதல் நடத்தியது. தற்போது சின்வரை படுகொலை செய்த காணொலி மத்திய கிழக்கில் மீண்டும் போர்ப் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.