world

img

போர் நிறுத்தத்தை மீறி காசாவில் இஸ்ரேல் தாக்குதல் : கைதிகள் பரிமாற்றத்தை நிறுத்துவதாக அறிவித்தது ஹமாஸ்

டெல்அவிவ்/காசா, பிப்.11- போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை திட்டமிடப் பட்டிருந்த கைதிகள் பரிமாற்றத்தை அடுத்த அறி விப்பு வரும் வரை தற்காலிகமாக  நிறுத்துவதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. சனிக்கிழமை மதியத்திற்குள் கைதிகளை வெளிவிடவில்லை என்றால் போர் நிறுத்த ஒப் பந்தம் ரத்து செய்யப்படும் என ஹமாஸ்க்கு டொ னால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதலை நியாயப்படுத்தி யுள்ளார். இதனைத்தொடர்ந்து போருக்கு தயாராக இருக்க இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவுறுத்தியுள்ளார். டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து விடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.  தற்காலிக வீடுகள்  ஹமாஸ் ராணுவப் பிரிவின் செய்தித் தொடர்பா ளர் அபு உபைடா  கொடுத்த பேட்டியில், இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தும் தாக்கு தல்களால் பாலஸ்தீனர்கள் வடக்கு காசாவுக்குத் திரும்புவது தாமதமா கின்றது. இஸ்ரேல் நடத்தும் குண்டு வீச்சுகளால்  பாலஸ்தீனர்களுக்கு வழங்கப்படும்  மனிதாபிமான உத விகள்  தடைபட்டுள்ளது எனவும் இஸ்ரேல் மீது குற்றம் சாட்டினார். காசாவில் சுமார் 90 சதவீதமான வீடுகளை இஸ்ரேல் அழித்துவிட்டது. போர் நிறுத்த உடன் படிக்கையின் கீழ் இடம்பெயர்ந்த மக்கள்  தங்குவ தற்கு தற்காலிக வீடுகளை காசாவில் அமைக்க வேண்டும் என  ஐநா அவை, கத்தார் உள்ளிட்ட சில நாடுகள் முன்வைத்தன. இதன்படி 60,000 நட மாடும் வீடுகள் மற்றும் 2,00,000 கூடாரங்கள் மற்றும் காசாவில் உள்ள வீடுகளின் இடிபாடுகளை அகற்ற கனரக இயந்திரங்கள் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டது. இந்த  கோரிக்கைகளை இஸ்ரேல் நிராகரித்ததாக  கூறப்பட்டுள்ளது. பாலஸ்தீனர்கள் காசாவில் இருந்து வெளி யேற்றப்பட வேண்டும் என்று கடந்த வாரம் டொனா ல்டு டிரம்ப் கூறினார். அவ்வாறு துரத்தப்பட்ட பிறகு அவர்கள் மீண்டும் காசாவிற்குள் வரக்கூடாது என தெரிவித்தார். மேலும் பாலஸ்தீனத்தை  அங்கீ கரிக்கும் நாடுகள் அவர்களை வைத்துக்கொள் ளட்டும் எனவும் கூறப்பட்டது. இதையடுத்து இஸ்ரே லும் பாலஸ்தீனர்களை துரத்துவதற்கு தயாராகி விட்டது.  இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.   அமெரிக்கா காசாவை ஆக்கிரமித்து பாலஸ் தீன கடற்கரை பகுதிகளில் பிரம்மாண்டமான ஹோட் டல்கள், தங்கும் விடுதிகளை கட்டி சுற்றுலாத்துறை மற்றும் ரியல் எஸ்டேட் வணிகத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது.அதன் வெளிப்பாடாக பாலஸ் தீனர்களை துரத்த அமெரிக்கா முடிவெடுத் துள்ளது.