world

img

ஜன.27 அன்று பதவியேற்கிறார் சியாமரோ காஸ்ட்ரோ

தெகுசிகல்பா, டிச.17- மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுரஸ் நாட்டின் ஜனாதிபதியாக இடதுசாரித் தலைவர் சியாமரோ காஸ்ட்ரோ ஜனவரி 27, 2022 அன்று பொ றுப்பேற்றுக் கொள்ளப் போகிறார். ஆட்சி மாற்றம் சுமூகமாக இருப்பதை உறுதி செய்வதற்காக ஒரு குழுவையும் சியாமரோ அமைத்துள்ளார். தங்கள் லிப்ரே கட்சியின் தலைவர்களில் ஒரு வரும், நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான ஜரி டிக்சன் இக்குழுவின் ஒருங்கி ணைப்பாளராக நியமிக்கப்பட்டி ருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 27, 2022 அன்று ஜனாதி பதியாகப் பொறுப்பேற்றுக் கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பாளராக நிய மிக்கப்பட்டுள்ள ஜரி டிக்சனுக்கு உதவ நடாலியா ரோக் மற்றும் பெலின்டா மார்டினஸ் ஆகிய இரு வரும் அக்குழுவில் இடம் பிடித்தி ருக்கிறார்கள். இதில் நடாலியா பிரபல வரலாற்று ஆய்வாளரா வார். சியாமரோ காஸ்ட்ரோவின் கணவரும், முன்னாள் ஜனாதி பதியுமான மானுவல் செலயா பதவியில் இருந்தபோது அரசு அதிகாரியாக நடாலியா பணி யாற்றியிருக்கிறார். மற்றொரு வரான பெலின்டா ஒருமுறை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டி ருக்கிறார். லத்தீன் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சியாமரோவின் வெற்றியை அங்கீ கரித்திருக்கின்றன. இதுவரையில் பதிவான வாக்குகளில் 99 விழுக்காடு வாக்குகள் எண்ணப் பட்டுள்ளன. அதில் 51 விழுக்காடு, அதாவது 17 லட்சத்து 9 ஆயிரத்து 663 வாக்குகளை சியாமரோ காஸ்ட்ரோ பெற்றுள்ளார். அவரது வெற்றி உறுதியாகியுள்ள நிலை யில்தான் பதவியேற்கும் தேதியை அவர் உறுதி செய்திருக்கிறார்.

சவால்கள்

ஹோண்டுராசில் சர்வாதிகார மற்றும் வலதுசாரிக் கட்சிகளின் ஆட்சிகளில் ஏழைகளின் எண்ணி க்கை அதிகரித்துக் கொண்டே போனது. தற்போதைய நில வரப்படி, 74 விழுக்காடு குடும் ்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளன. 53.7 விழுக்காடு குடும் பங்கள் கடுமையான வறுமை யால் வாடுகின்றன. வெளிநாட்டுக் ்கடன் (தனியார் மற்றும் அரசு) நடப்பாண்டின் முதல் ஆறு மாதத்தி லேயே அமெரிக்க டாலர் 1,100 கோடியைத் தொட்டிருக்கிறது.