world

img

மக்களைப் பாதுகாத்த சோசலிசம்

உலகின் மிகப்பெரும் சந்தை

* ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தொடக்கம். வெளிநாடுகளில் இருந்து படிப்பை முடித்து விட்டு வரும் இளைஞர்கள் இந்த நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள்.
* பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 16 கோடியாகும். ஒன்றுடன் ஒன்று போட்டிபோட்டுக் கொண்டு, அனைத்துமே வளர்கின்றன.
* பெரும் நுகர்வுச் சந்தையைக் கொண்டுள்ள சீனாவில் சில்லரை வர்த்தகத் துறையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 30 கோடி பொட்டலங்கள் போடப்படுகின்றன.
* ஆய்வுகளுக்கு செலவிடுவதில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது.
*மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமானம் ஆண்டுக்கு தலா 12 ஆயிரம் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. உலகிலேயே அதிகமான நுகர்வோர்களையும், மிகப்பெரிய சந்தையையும் கொண்ட நாடாக சீனா உருவாகியிருக்கிறது.
*புதிய கண்டுபிடிப்புகள் எண்ணிக்கையில் பத்தாண்டுகளுக்கு முன்பாக 34வது இடத்தில் இருந்த சீனா, தற்போது 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பெய்ஜிங், ஜன.4- உலகம் முழுவதும் கடுமையான விலை யுயர்வைச் சந்தித்து வரும் வேளையில், உள்நாட்டில் பொருட்களின் விலைகளை உயர விடாமல் பார்த்துக் கொள்வதில் சீனா  வெற்றி பெற்றுள்ளது. இது குறித்துப் பல்வேறு புள்ளிவிபரங்களை சீன வல்லு நர்கள் வெளியிட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா வில் இதுவரை இல்லாத அளவுக்கு பண வீக்கம் பெரும் நெருக்கடியாக மாறி யிருக்கிறது. அதேவேளையில், சீனாவில் நிலையான விலைவாசி நிலவுகிறது. அரசின்  தலையீட்டால் நுகர்வோர் குறியீட்டு எண்  வெறும் 2 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள் ளது. அனைத்து கோணங்களிலும் உண வுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்து வதற்கான பணியில் அரசு இறங்கியது. அதோடு, நிலையான மற்றும் பாதுகாப்பான எரிபொருள் விநியோகத்தைத் தருவதில் முன்னின்றிருக்கிறார்கள். கோவிட் பெருந்தொற்று மற்றும் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகள் ஐரோப்பிய நாடுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளன. எரிபொருளுக்காக ரஷ்யாவை நம்பி யிருந்த ஐரோப்பிய நாடுகள் பற்றாக்குறை யால் திண்டாடுகின்றன. நிறுவனங் களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாளர்கள் போராட்டக்களத்தில் உள்ளனர். தொழிற்சங்கங்களில் இணையும் தொழி லாளர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகமாகியிருக்கிறது.

உலகம் முழுவதும் நெருக்கடி ஏற்பட்டு வருவதாக வல்லுநர்கள் சொல்லி வந்தா லும், தனது பொருளாதாரத்தை நிலைக்க வைப்பதில் சீனா வெற்றி பெற்றுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 33 புதிய கொள்கைகளை சீனா திட்டமிட்டது. ஒன்றுபட்ட உள்ளூர் சந்தை,  புதிதாக நடைமுறைக்கு வந்த மதிப்பு வரியை திரும்பக் கொடுத்தது, கல்லூரியில் பட்டப் படிப்பை நிறைவு செய்து வந்தவர்களுக்கு வேலைகள் தருதல் உள்ளிட்டவற்றை கறாராக நடைமுறைப்படுத்தினார்கள். கிராமப் புறங்களில் புதிய வேலைகள் உரு வாக்கப்பட்டதால் அப்பகுதிகள் முன்னேற்றத் தைக் கண்டன.

கட்டுக்குள் பணவீக்கம்

ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா விலும் பணவீக்கம் கடுமையாக அதி கரித்துள்ள நிலையில், சீனாவில் 2 விழுக்காட்டிற்குள் வைப்பதில் சீனா வெற்றி கண்டுள்ளது. ஏற்கனவே உணவுப் பாது காப்பில் சீனா பெரும் முன்னேற்றம் கண்ட  நாடாகும். அந்த அடித்தளத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதில் சீனா கவனம் செலுத்தியது. நிலையான மற்றும் பாது காப்பான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தியதால் விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைக்க முடிந்தது. இதனால் அழுத்தங்களைத் தாக்குப் பிடித்து, சாதகமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளார்கள். 2022 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களிலேயே முந்தைய ஆண்டின் வர்த்தகத்தை விட 13.3 விழுக்காடு அதிக மான வர்த்தகத்தை சீனா மேற்கொண்டது. தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை  ஒவ்வொரு ஆண்டும் அடைந்து வரு கிறார்கள். சீனாவின் மொத்த உள்நாட்டு  உற்பத்தி 114 லட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. நிதானமான வளர்ச்சியைத் திட்டமிட்டுள்ள சீனாவில் மிகப்பெரும் சந்தை, திறன் வாய்ந்தவர்கள் மற்றும் முதலீட்டிற்கான வாய்ப்புகள் அனைத்தும் இருக்கின்றன. 140 கோடி மக்கள், 90 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களில் 22 கோடி தொழில்நுட்ப வல்லுநர்கள் இருப்பதால், திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியை சீனாவால் அடைய முடிந்துள்ளது. இந்த சாதனைகளுக்கு சீனாவின் சோசலிசக் கட்டமைப்புகளே காரணம் என்றும், வரும் காலத்தில் மேலும் முன்னேற வாய்ப்புகள் உள்ளன என்றும் பொருளா தார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ள னர்.