விஜயவாடா, செப்.11- சந்திரபாபு நாயுடு கைதைக் கண்டித்து, ஆந்திராவில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆந்திர மாநில முன்னாள் முதல் வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலை வருமான சந்திரபாபு நாயுடு, 2014 முதல் 2019 வரை ஆட்சியில் இருந்தபோது, இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுக்காக ‘சீமென்ஸ்’ நிறுவனம் மூலம் பொறியியல் கல்லூ ரிகள் உட்பட தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு ரூ. 371 கோடி ஒதுக்கீடு செய்தார். இதில் ரூ. 118 கோடி ஊழல் நடந்ததாகவும், அதில் சந்திர பாபு நாயுடுவுக்கு தொடர்பு இருப்பதாக வும் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி அரசு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு 2 ஆண்டு களாக கிடப்பில் கிடந்தது. சந்திரபாபு நாயுடு கைது சனிக்கிழமையன்று அதிகாலை 1 மணியளவில் பேரணிக்கு சென்று விட்டு, நந்தியாலா பகுதியில் நிறுத்தப் பட்டிருந்த பேருந்தில் சந்திரபாபு நாயுடு, ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த பொழுது, மாநில சிஐடி போலீசார் திடீ ரென சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர்.
பல மணி நேரம் விசாரணைக்குப் பின், ஞாயிறன்று விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடுவை ஆஜர்படுத்தி னர். அங்கு 6 மணிநேரம் நடைபெற்ற வாதத்திற்கு பிறகு சந்திரபாபு நாயுடு வை 14 நாட்கள் (செப்., 22 வரை) நீதிமன்றக் காவலில் வைக்க விஜய வாடா நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, சந்திரபாபு நாயுடு ஞாயிறன்று இரவு ராஜமகேந்திரவர்மம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முழு அடைப்புப் போராட்டம் இதனால் ஆவேசமடைந்த தெலுங்குதேசம் கட்சியினர், சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து திங்களன்று ஆந்திராவில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பவன் கல் யாணின் ஜன சேனா கட்சியும் ஆதரவு தெரிவித்த நிலையில், முன்னெச்சரிக் கை நடவடிக்கையாக ஆந்திர அரசு மாநி லம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது.
சித்தூரில் வன்முறை
எனினும், தெலுங்கு தேசக் கட்சி தொண்டர்கள் மாநிலத்தின் பெரும் பாலான பகுதிகளில் மறியல், தர்ணா வில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தெலுங்கு தேசக் கட்சி யின் எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். சித்தூர், கடப்பா பகுதிகளில் வாகனங்கள் எரிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறின. இத னால் அப்பகுதியில் ஆயுதம் ஏந்திய போலீசார் ரோந்து பணியில்ஈடுபட்டனர்.
பள்ளி, கல்லூரிகள் மூடல்
முழுஅடைப்பு போராட்டம் காரண மாக ஆந்திராவில் பரவலாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட் டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக் கள் இயங்கவில்லை. கடைகள் அனை த்தும் மூடியிருந்தன. திருப்பதி - திரு மலை இடையே மட்டும் ஒன்றிரண்டு வாகனங்கள் இயக்கப்பட்டன. பேருந்து கள், ஆட்டோக்கள் ஓடாததால் ரயில் களில் கூட்டம் அலைமோதியது.
அமைச்சர் ரோஜா பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சந்திரபாபு நாயுடுவை விஜயவாடா நீதிமன்றம் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஆந்திரப் பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா தனது இல்லத்தின் முன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினார்.
ஆளுநரிடம் தெலுங்கு தேசம் புகார்
சந்திரபாபு நாயுடு கைது செய்யப் பட்டதை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் குழு விசாகப்பட்டி னத்தில் ஆந்திர ஆளுநர் அப்துல் நசீரை திங்களன்று சந்தித்து புகார் அளித்தனர்.