world

img

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் ‘லேபர் கட்சி’ வெற்றி

லண்டன், ஜூலை 5- இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை (பழமைவாதக் கட்சி) வீழ்த்தி கெய்ர் ஸ்டார்மர் தலைமை யிலான லேபர் பார்ட்டி (தொழிலாளர் கட்சி) வெற்றி பெற்றுள்ளது. மொத்த முள்ள 650 நாடாளுமன்ற தொகுதி களில் 412 தொகுதிகளில்  வென்று அதீத பெரும்பான்மையுடன் ஆட்சி யில் அமர்கிறது லேபர் கட்சி. 18 வயது வந்த இங்கிலாந்து குடிமக்கள்  வாக்களிக்கும் இந்த தேர்தலில் ஆட்சி அமைக்க 50 சதவீத  நாடாளுமன்ற தொகுதிகளை வென்று  இருக்க வேண்டும். 356 இடங்களைப் பெறும் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இயலும். இந்த தேர்தலில் லேபர் கட்சியின் முன்னாள் தலைவராகவும் இங்கிலாந்து எதிர்க் கட்சி தலைவராகவும் இருந்த ஜெர்மி கோர்பின் பாலஸ்தீன ஆதரவு  மற்றும் முற்போக்கு கொள்கைகளை முன் வைத்தார். இதன்காரணமாக அக்கட்சியின் புதிய தலைவரான ஸ்டார்மர், அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை மறுத்தது டன் கட்சியை விட்டும் நீக்கினார். தொழி லாளர் கட்சி எனப் பொருள்படும் லேபர் கட்சி, பெயரில் தொழிலாளர் கட்சி என்று இருந்தாலும், அது ஒரு  முதலாளித்துவக் கட்சியே ஆகும். அதில், கோர்பின் போன்ற இடதுசாரி முற்போக்கு சிந்தனையாளர்கள் ஒரு தரப்பு இருந்தனர். அவர்களை  அக்கட்சியில் உள்ள பெரும் பணக் கார அதிகார வர்க்க ஆதரவாளர்கள் ஒழித்துக் கட்டினார்கள்.  கடந்த நான்காண்டு காலத்தில், தொழிலாளர் கட்சிக்குள் இருந்த இடது சாரிகளை ஒழித்துக் கட்டுவதில் முனைப்புடன் செயல்பட்டவர்தான் தற் போது பிரதமராக பொறுப்பேற்கப் போகிற அக்கட்சியின் தலைவர் ஸ்டார்மர். ஜெர்மி கோர்பின் போன்றே, லேபர் கட்சியில் உள்ள மேலும் சில  முற்போக்கு நபர்களுக்கும் போட்டி யிட அனுமதி வழங்காமலும் கட்சியில் செயல்பட விடாமலும் லேபர் கட்சி யின் திசையை மாற்றினார் ஸ்டார்மர். ஜெர்மி கோர்பின் மகத்தான வெற்றி இந்நிலையில், ஜெர்மி கோர்பின் இஸ்லிங்டன் வடக்கு  தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு லேபர்  கட்சியின் மிகப்பெரும் இந்திய வம்சா வளி கோடீஸ்வரரான பிரஃபுல் நர்குனை வீழ்த்தி மகத்தான வெற்றி  பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இவரது வெற்றி மிகப்பெரும் வெற்றியாக சர்வதேச அளவில் பாராட்டப்படுகிறது.     2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 355 இடங்களை வென்றிருந்தது. மேலும் 2010 முதல் தொடர்ந்து ஆட்சி யில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி  தற்போது தனது பெரும் தோல்வியை தழுவியுள்ளது. தேர்தல் முடிவு களைத் தொடர்ந்து பிரதமரும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரு மான ரிஷி சுனக் ராஜினாமா செய்துள் ளார். ஸ்டார்மர் புதிய பிரதமராக அடுத்த வாரம் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 20 ஆண்டுகளில் இது  லேபர் கட்சிக்கு சிறந்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. எனினும் ஏகாதி பத்திய நாடுகளில் ஒன்றான இங்கி லாந்தில் இக்கட்சி வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புகள் இல்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, இஸ்ரேல் ஆதரவு, பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் மறுப்பது, போர் பொருளாதாரம், நேட்டோ ஆதரவு, இஸ்லாமிய வெறுப்பு, அதிதீவிர தனியார்மய மாக்கல், தொழிலாளர் விரோதப் போக்கு, புலம்பெயர்ந்தோர் வெறுப்பு என அனைத்திலும் இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சி,  தாராள ஜனநாயகவாதிகள் ஆகியோ ருக்கு இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

;