அர்ஜெண்டினா நிலைபாட்டை மறுபரிசீலனை செய்ய அழைப்பு
பாலஸ்தீனம் மீதான வெளியுறவுக் கொள்கையில் அர்ஜெண்டினாவின் சமீபத்திய நிலைபாட்டை மறுபரிசீலனை செய்ய அரபு கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள் ளது. அர்ஜெண்டினா தலைநகரில் நடைபெற்ற அரபு நாடுகளின் தூதர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த அந்நாட்டு ஜனாதிபதி ஜேவியர் கடைசி நிமிடத்தில் கலந்துகொள்ளாமல் பின்வாங்கினார்.இதனால் ஏற்பட்ட அதிருப்தி யில் அரபு கூட்டமைப்பு இவ்வாறு தெரிவித்துள் ளது என கூறப்படுகிறது.
இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் கண்டனம்
பணயக்கைதிகளை மீட்பதாக கூறி இஸ் ரேல் ராணுவம் நடத்திய கொடூரமான தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் அந் தோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள் ளார். நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதற்கும், மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்த தற்கும் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளதாக ஐநா செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியுள்ளார்.
காசா போர் குறித்தான கூட்டத்தில் பாக் பங்கேற்பு
காசாவில் நடைபெற்று வரும் போர் குறித்த உயர்மட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தார் இரண்டு நாள் பயணமாக ஜோர்டானுக்குச் சென்றுள்ளார். ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, எகிப்தின் ஜனாதிபதி அப்தெல்-பத்தா அல்-சிசி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
கலிபோர்னியா மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் மீது அந்நாட்டு காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கூடாரம் அமைத்து போராடிவரும் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் புதி தாக மூன்றாவது இடத்தில் கூடாரங்கள் மற்றும் தடுப்புகளை அமைத்து போராட்டத்தை தீவிரப் படுத்தியுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.
வங்கதேச ராணுவத்திற்கு புதிய தளபதி
வங்கதேச ராணுவ தலைமை தளபதி எஸ்.எம். ஷஃபியுதீன் அகமது ஓய்வு பெறும் நிலையில் புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் வாக்கர் - யூஸ்-ஜமான் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஜூன் 23 முதல் மூன்று ஆண்டுகளுக்கு அவர் ராணுவத் தளபதியாக சேவை செய்வார் என வங்கதேச பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் சேவை தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.