world

img

உலகம்/சட்டமன்றம் - உலகைச் சுற்றி - ஆர்.சிங்காரவேலு

சத்தமின்றி ஒரு யுத்தம்

அமாண்டா ஈ என்ற அம் ்மையார், அமெரிக்கா வின் ‘லிபரேஷன் நியூ’ எனும் செய்தி ஊடகத்தின் நிர்வாக ஆசிரியர். இவர் கடந்த மாதம் 20 நபர் குழுவுடன் கியூபாவிற்கு சென்று, 60,000 டாலர் பெறு மான உயிர் காக்கும் புற்றுநோய்க் கான மருந்துகளை, இரண்டு மருத்துவமனைகளுக்கு வழங்கி னார். இவரது தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அவ்வப்போது கியூபாவிற்கு மருந்துகள் மற்றும் மனிதாபிமான உதவி வழங்கப்படு கிறது. 10 நாள் பயணமாக சென்ற இக்குழு, கியூபாவின் பல நிறுவ னங்களின் பிரதிநிதிகள், நாடாளு மன்ற உறுப்பினர்களைச் சந்தித்த னர். இவரது பயணம் மூலம் அமெ ரிக்க கொள்கைகள் எவ்வாறெல் லாம் கியூப மக்களைப் பாதிக்கிறது; அவற்றைப் பொருட்படுத்தாமல் சோசலிச நிர்மாண பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கியூபா மக்கள் ஈடுபடுவதையும் காண முடிந்தது என்கிறார் அமாண்டா. இந்த குழு தனது கியூபா பயணத்தின் மூலம் கற்றுக் கொண்ட மூன்று படிப்பினைக ளைக் குறிப்பிட்டுள்ளது: 1 1960 முதல் கியூபா மீது அமெ ரிக்கா விதித்துள்ள பொருளா தார தடைகள் என்பது பொரு ளாதார ரீதியிலான யுத்தமே ஆகும். கியூப மக்களின் வாழ்வில் பல துயரங்களை ஏற் படுத்துவதன் மூலம், கம்யூ னிஸ்ட் ஆட்சி மீது விரக்தியுற்று கியூபா அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்; அமெரிக்க கார்ப்ப ரேட்டுகளின் வணிக நலன் களை பாதுகாக்கலாம் என்பதே இந்த ஏகாதிபத்திய யுத்தத்தின் குறிக்கோள். அமெரிக்கா விதித் துள்ள புதிய பொருளாதார தடை கள் கியூபாவில் தற்போது உணவு, மாவு மற்றும் எரி பொருள் சப்ளைகளை கடுமை யாக பாதித்துள்ளது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகள் , உரம், விவசாய எந்திரங்கள் சப்ளையும் அமெரிக்க பொரு ளாதார தடைகளால் பாதிக்கப் பட்டு உணவு உற்பத்தி கடும் பாதிப்பு அடைகிறது. மெக்சிகோ நன்கொடையாக வழங்கும் டிராக்டர்கள், மண்வெட்டிகள் மற்றும் இதர விவசாய சப்ளை களை நம்பி பல கியூப விவசா யிகள் உள்ளனர். அமெரிக்கா 60 ஆண்டுக்கு மேல் கியூபா மீது விதித்துள்ள பொருளாதா ரத் தடைகளால் கியூபாவில் அனைவருமே பாதிக்கப் பட்டுள்ளனர். 2கியூப நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கு ஊதியம் இல்லை. தேர்தல் பிரச்சாரம் செய்வதில்லை. தேர்தல் நிதி திரட்டுவதில்லை. அரசு நிர்வா கம் ஒவ்வொரு விஷயத்திலும் பரந்துபட்ட சமூக மக்களுடன் கலந்து ஆலோசிக்கிறது. 2022இல் இவ்வாறு தான் புதிய குடும்ப சட்டத்தொகுப்பு நிறை வேறியது .மனிதாபிமானத்தை மையமாகக் கொண்டு, லாபத்தை புறந்தள்ளி ,கண்ணி யமான வாழ்வை நோக்கி மாற்று உலகம் நிர்மாணிப்பது சாத்தியமே என்பதை நிரூபிக்கும் பயணத்தில் முன் நகர்கிறது கியூபா. 3மிக மோசமான புறச் சூழ்நிலைகளுக்கு மத்தியி லும், கியூபப் புரட்சியை பாது காக்க கியூப மக்கள் எடுக்கும் முயற்சிகள், அமெரிக்கா உட்பட உலக இடதுசாரி, முற்போக்கு சக்திகளுக்கு பெரும் உத்வேகம் அளித்து வருகிறது.

இஸ்ரேலுக்கு ஆயுத சப்ளை கூடாது:  61% அமெரிக்க மக்கள் எதிர்ப்பு

‘மிகப் பெரும் புதைகுழி’கடந்த ஜூன் 8 அன்று ஒரு லட்சம் அமெரிக்கர்கள், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைச் சூழ்ந்து, இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்தும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு துணை போவதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர் .ஏராளமானோர் சிவப்பு ஆடை அணிந்து வந்தனர்.  சிபிஎஸ் நியூஸ் கருத்துக்கணிப்பு படி, 61% அமெரிக்க மக்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யக்கூடாது என  கருதுகின்றனர். 30 வயதிற்கு கீழ்  உள்ளோர் 77% பேர் இவ்வாறு கருது கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த எட்டு மாதங்களாக பாலஸ்தீன ஒருமைப்பாடு இயக்கமும், வேறு பல  அமைப்புகளும், வெகுஜன மக்கள் விழிப்புணர்வு இயக்கமும், அமெரிக்கா வின் தெருக்களில் இறங்கிப் போராடுவது, போக்குவரத்தை தடை செய்வது, பல் கலைக்கழகங்களில் டெண்ட் அமைத்து போராடுவது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. 2023 நவம்பர் 4இல் அமெரிக்காவின் தலைநகரத்தில் 5 லட்சம் மக்கள் பங்கேற்ற பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  முதலாளித்துவ கார்ப்பரேட் ஊடகங்கள், இஸ்ரேலின் இனப்படு கொலை செய்திகளை  மறைத்த போதிலும் சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு செய்திகள் சென்றடைகின்றன.  இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு உடந்தையாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இருப்பதாக மக்கள் கருதுவதால் 2024 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் பைடனுக்கு வாக்குகள் குறையும் எனத் தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு மற்றொரு தேர்வாக இருப்பது மீண்டும் டிரம்ப் என்பதுதான். இதனிடையே, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு  அமெரிக்க நாடா ளுமன்றத்தில் பேச வருவதால், அதை எதிர்த்து வாஷிங்டனில் ஜூலை 24இல் மீண்டும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘மிகப் பெரும் புதைகுழி’

ஐரோப்பிய யூனியன் பின்பற்றும் புலம்பெயர் வோர் குறித்த கொள்கைகளால், உலகின் மிகப்பெரும் புதை குழியாக மாறி வருகிறது மத்தியதரை கடல். கடல் வழியாக ஐரோப்பிய நாடுக ளுக்குள் நுழைய விரும்புவோர் வந்த படகுகள் கட லிலே மூழ்கி அவர்கள் உயிருக்குப் போராடினாலும், எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடற்கரை பாதுகாப்பு படையினர் உரிய நேரத்தில் சென்று காப்பாற்றத் தவறுகின்றன. துருக்கியில் இருந்து இத்தாலி சென்ற 70 பேர் பய ணித்த படகு கடலில் கவிழ்ந்ததில் ஏராளமானோர் மடிந்த னர். ஜூன் 16இல் இச்சம்பவம் நேர்ந்தவுடன் இத்தாலிய கடற்கரை பாதுகாப்பு படையினருக்கு ஹாட் லைன் போன் செய்தி சென்றபோதும் திட்டமிட்டு அவர்கள் காலதாமதம் செய்தனர். இன்னொரு படகு லிபியாவிலிருந்து இத்தாலி சென்றபோதுவிபத்துக்குள்ளானது. 10 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். எகிப்து ,சிரியா, பாகிஸ்தான் உள் ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோர் 3 ஆயிரத்து 500 டாலர் பயணக் கட்டணம் செலுத்தி மேற்கண்ட படகில் பயணம் செய்தனர். இது மட்டுமல்ல; 2020 - 2023 ல் 43 பேர் கடற்கரை பாதுகாப்பு படையினரின் கொடூர சித்ரவதை களால் இறந்தனர். 2023 ஜூன் மாதம் 750 பேர் பயணம் செய்த கப்பல் கவிழ்ந்ததில், 100 பேர் மட்டுமே உயிர் தப்பினர். இந்த ஆண்டில் இதுவரை 67,000 வெளிநாட்டினர் கடல் மார்க்கம் மூலமாக ஐரோப்பாவிற்கு வந்துள்ள னர். இவர்களோடு வந்த சுமார் 600 பேர் இறந்தனர். தங்கள் நாடுகளில் நிலவும் யுத்தம், ஆக்கிரமிப்பு மற்றும் வறுமை காரணமாக வேறு வழியின்றி புலம்பெயரும் எளிய மக்களே இவர்கள்.

ஓங்கியுள்ளது வலதுசாரிகளின் கை

ஐரோப்பிய யூனியன் என்பது 27 ஐரோப்பிய நாடுகளின் கூட்ட மைப்பு ஆகும். இதன் பொது நாடா ளுமன்றத்திற்கான தேர்தல் ஜூன் 6 -9 இல் நடைபெற்றது. 27 நாடுகளில் உள்ள 37 கோடி மக்களில் 51% பேர் வாக்களித்தனர். இத்தேர்தலில் வலதுசாரி கள் மற்றும் தீவிர வலதுசாரிக் கட்சிகள் கூடுதல் இடங்களை பெற்று ஆதாயம் அடைந்துள்ளன. மொத்தமுள்ள 720 இடங்களில், ஐரோப்பிய மக்கள் கட்சி (கிறிஸ்தவ ஜனநாயக கட்சி) 189 இடங்க ளைப் பிடித்து முதலிடத்தை பெற்றுள்ளது. சென்ற தேர்தலை விட 10 இடம் கூடுதல். தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பிரெஞ்சு நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார். ஜூன் 30 மற்றும் ஜூலை 7 இல் பிரான்சில் தேர்தல் நடத்தவும் முடிவு செய்துள்ளார். ஐரோப்பிய நாடாளு மன்றத் தேர்தலில் மேக்ரான் கட்சிக்கு  ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, அவர் பிரான்ஸ் தேர்தலை அறிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியன் தேர்தலில் சோச லிஸ்ட்கள் மற்றும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி, 135 இடங்களை வென்றது. இடது சாரி குழுக்கள் 36 இடங்களில் வென்றுள்ளன. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, பெல்ஜியம் பிரதமர் ராஜினாமா செய்துள் ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐரோப் பிய யூனியன் தேர்தலுடன், பெல்ஜியம் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்றது. பெல்ஜியம் தொழிலாளர் கட்சி பெல்ஜியம் நாடாளுமன்றத்தில் 15 இடங்களில் வெற்றி  பெற்றது. 15 ஆண்டுகள் இக்கட்சி தொடர்ந்து கவனமுடன் செயல்பட்டு 15 இடங்களில் வென்றுள்ளது. வெற்றி பெற்றவர்களில் ஒரு தொழிலாளியும்  உள்ளார். பொது முதலீடுகளை உயர்த்துதல், தனி யார்மயத்தில் இருந்து சுகாதாரத் துறையை ஒதுக்கி வைப்பது, பெரும் பணக்காரர்க ளுக்கு வரி விதிப்பது, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு என இக்கட்சி பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பல வலது சாரி கட்சிகள், இனவெறியை முன்வைக் கின்றன. புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்துவது, எல்லைகள் பாதுகாப்பு , உள் நாட்டு மக்களின் நலன்களுக்கு முன்னு ரிமை, நேட்டோ  ராணுவ கூட்டணிக்கு அடி பணிதல், தொழிலாளர் நலன்களுக்கு எதி ரான சிக்கன சீரமைப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது; எதுவும் மாறாது என்ற பாசிச கருத்தை மக்கள் மனதில் நிலை நிறுத்துவது என்ற கோட்பாடுகளைக் கொண்டவர்கள் இவர்கள்.  இத்தகைய நபர்கள் வெவ்வேறு அமை ப்புகளின் பெயரில், ஐரோப்பிய மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர் என்பது கவ னிக்கத்தக்கது. ஐரோப்பிய யூனியன் தேர் தல்களால், தற்காலத்தில் நிலவும் சமூக, காலநிலை மாறுதல் நெருக்கடிகளுக்கோ, ராணுவ மோதல்களை, யுத்தங்களை முடிவிற்கு கொண்டு வருவதற்கோ எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை; கிடைக்காது.

ஒன்றுபட்ட போராட்டமே தீர்வு வழிகாட்டும் அமெ.தொழிலாளர்

வேஃபிள் ஹவுஸ் (WA FFLE HOUSE)  என் பது அமெரிக்கா வில் உள்ள துரித உணவு சப்ளை செய்யும் பெரிய பகாசுர கம்பெனியாகும். 68 ஆண்டு களில் இல்லாதவாறு, கடந்த மே மாதம் இக்கம்பெனித் தொழிலாளர்கள் ஒன்று பட்ட வலுவான போராட்டங்கள் மூலம் ஊதிய உயர்வு பெற்றனர். ‘யூனியன் ஆப் சதர்ன்  சர்வீஸ் ஒர்க்கர்ஸ்’ என்று புதிதாக துவங் கப்பட்ட தொழிற்சங்கத்தில் தொழிலாளர்  இணைந்து போராடினர்.  அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் குறைந்த ஊதியம் பெறும் சில்லறை வணிக, துரித உணவு சப்ளை, எரிவாயு சப்ளை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை இச்சங்கம் திரட்டி வருகிறது. வேஃபிள் ஹவுஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், முற்றுகை உட்பட பல  போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்ற னர். ஒரு மணி நேர வேலைக்கு 25 டாலர் ஊதியம், 24 மணி நேர பாதுகாப்பு, கம்பெனி கேண்டீனில் சாப்பிட்டாலும், சாப்பி டாவிட்டாலும் ஷிப்ட்டுக்கு மூன்று டாலர் பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளுக் காக போராட்டங்கள் மூலம் கம்பெனிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது என தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். பொதுமக்களிடம் மகஜரில் கையெழுத்து பெற்று வருகின்றனர். அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் மணிக்கு 7.25 டாலர்.

குற்றவாளி ஆன சிக்குயிட்டா கம்பெனி

அமெரிக்காவில் சிக்குயிட்டா பிரான்ட்ஸ் இன்டர்நேஷனல் என்ற கம்பெனி உள்ளது. கொலம்பியாவின் வலதுசாரி துணை ராணுவக் குழுவிற்கு இக் கம்பெனி அளித்த நிதிமூலம், கொலம்பியாவில் பலர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து வழக்கினை விசாரித்த அமெரிக்காவின் புளோரிடா நீதிமன்றம், மேற்கண்ட நிறுவனம் மனித உரிமை மீறல் குற்றத்தை புரிந்துள்ளதாக தீர்ப்பளித்தது. கொலம்பியாவில் பலியானவர்க ளின் குடும்பங்களுக்கு 3.8  கோடி டாலர் இழப்பீடு கம்பெனி வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறுகிறது . இன்னொரு நாட்டில், மோசமான   மனித உரிமை மீறல் குற்றம் புரிந்ததற்காக அமெரிக்காவின் பிரதான கார்ப்பரேட் கம் பெனி தண்டிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ரத்த  வெறி பிடித்த, கார்ப்பரேட் பேராசைக்கு எதிராக, நீதிக்கான போராட்டத்தில் இது முன்னுதாரணமான தீர்ப்பாகும்.