world

img

உலகின் மிகப்பெரிய பணக்கார நாடான அமெரிக்காவில் வீடில்லாதவர்கள் 7.7 லட்சம் பேர்

நியூயார்க்,டிச.28- உலகின் மிகப்பெரிய பணக்கார நாடாக உள்ள அமெரிக்காவில் சுமார்  7 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் வீடற்ற வர்களாக உள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை சார்பில்  2024 ஜனவரி மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு வெளியிடப் பட்ட நிலையில் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  வீடு இல்லாமல் உறவினர் வீட்டில் உள்ளவர்கள் அல்லது நண்பர்கள்  வீட்டில் அடைக்கலம் புகுந்துள்ளவர் களை இந்த ஆய்வில் கணக்கில் கொண்டுவர வில்லை. அப்படி கொண்டு வந்திருந்தால் வீடற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சத்தை கடந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.  2023 -ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி வீடற்றவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் என்ற அளவில் இருந்தது. தற்போது 2024 இல் 18.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க அரசானது, அந்நாட்டு மக்கள் சந்திக்கும் நெருக்கடிகளை சரி  செய்வதற்கு மாறாக, தனது மக்களின் வரிப்பணம் மற்றும் வளரும் நாடு களின் இயற்கை வளங்களை கொள்ளை யடித்து சேமித்து வைத்துள்ள ஒட்டுமொத்த நிதியில் பெரும்பகுதியை ராணுவத்திற் காகவும் போர்களுக்காகவும்  மட்டுமே செலவு செய்து வருகிறது. அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக முதலாளிகளின் மூலதனத்தை பாதுகாத்து பெருக்கும் பணியை மட்டுமே அந்நாட்டு அரசு செய்து வருகிறது.  இதனால் வீடற்ற அமெரிக்க மக்கள் தெருக்களில் திறந்த வெளியிலும், கூடாரங்களிலும் சுகாதாரமற்று வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்த கைய மோசமான பொருளாதாரச் சூழல் காரணமாக பலர் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அமெரிக்காவின் பல  மாகாணங்களில் நாள்தோறும் வணிக நிறுவனங்களில் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்கள் இதனை உறுதிப்படுத்து கின்றன.  அமெரிக்க மக்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ள இத்தகைய மோசமான பொருளாதார நிலை, பணவீக்கம், விலை வாசி உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த தற்போதைய பைடன் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் ஆட்சி எந்த முயற்சி யையும் மேற்கொள்ளவில்லை. 2025 இல் ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள டிரம்ப்  அரசும் இந்த நெருக்கடியை சரி செய்ய  தெளிவான திட்டங்களை முன்வைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.