world

img

400 கோடி டாலர்கள் இழப்பு

சுக்ரே, ஜூலை 9- சட்டவிரோதமாக பொலிவியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த ஜீனைன் அனெஸ் தலைமையிலான அரசால் நாட்டிற்கு 400 கோடி டாலருக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பொலிவியாவின் பொருளாதா ரத்துறை அமைச்சர் மார்செலோ மாண்டிநீக்ரோ அறி வித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாண்டி நீக்ரோ, “நாங்கள் பொருளாதாரத்தை மீண்டும் கட்ட மைத்து வருகிறோம். 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சரிவு, கடந்த 40 ஆண்டுகளில் காணாத ஒன்றாகும். 400 கோடி டாலருக்கும் மேல் நாம் இழப்பை சந்தித்துள்ளோம். இதற்கு முன்பு இருந்த அனெஸ் தலைமையிலான அரசால் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியவில்லை. கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக காலாண்டில் கூட பொருளாதாரத்தில் வளர்ச்சியை அவர்கள் ஏற்படுத்தவில்லை” என்று குறிப்பிட்டார். இதுவரையில் இல்லாத அளவுக்கு பற்றாக்குறை விட்டுச் சென்றுள்ளார்கள் என்று பொருளாதார ஆணை யத்தின் உறுப்பினர்களில் ஒருவரான ஓமர் யுஜா தெரி வித்துள்ளார். இடதுசாரிகள் ஆட்சியில் இருந்தபோது இந்தப் பிராந்தியத்தில் முதலிடத்தில் இருந்த பொலி வியா, அனெஸ் ஆட்சியின்போது ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. அரசின் கஜானா காலியாக விடப் பட்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.