நாடு முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தைக் கட்டுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
நெருக்கடியான காலகட்டத்தில் தொழிலாளர்களின் ஊதியத்தில் கை வைப்பதால் அதிருப்தியான கோடைக்காலமாக மாறும் என்று பிரிட்டனின் மிகப்பெரிய தனியார் துறை தொழிலாளர்களின் தொழிற்சங்கமான யுனைட் எச்சரித்துள்ளது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளரான ஷரோன் கிரகாம், "ஆண்டாண்டு காலமாக அதிருப்தியான காலகட்டத்தையே தொழிலாளர்கள் சந்தித்து வருகிறார்கள். பணவீக்கத்திற்காக தொழிலாளர்கள் சுமையை ஏற்க வேண்டும் என்றால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டியிருக்கும்" என்று குறிப்பிட்டார்.