ஜோகன்னஸ்பர்க், ஆக.31- தென் ஆப்பிரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஆல்பர்ட்ஸ் மற்றும் டெல்வர்ஸ் தெருவில் இருக்கும் ஐந்து மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 73-க்கும் மேற்பட்ட புலம்பெயர் மக்கள் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத் தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட ஐந்து தளங்களி லும் சிறு சிறு குடில்களாக அமை த்து 100க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வந்திருப்பதாக தெரி கிறது. கைவிடப்பட்ட கட்டிடம் என்ப தால் முறையான பாதுகாப்பு வசதிகள் எதுவும் அங்கு இல்லை எனவும் அதிக மக்கள் வசித்து வந்ததால் தீயில் இருந்து தப்பிக்க முயன்ற போது பலர் கட்டிடத்தின் முறையற்ற வடிவமைப்பால் மாடிப் படிகளில் சிக்கி உயர் இழந் துள்ளனர்; இதனால் பலி எண் ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது. தீய ணைப்புத் துறையினர், அவசர கால மீட்புப் படையினர் ஆகியோர் தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டு படுகாயமடைந்த 40-க்கும் மேற் பட்ட நபர்களை மருத்துவமனை யில் அனுமதித்துள்ளனர்.