கிறிஸ்டலினா ஜார்ஜீவா
நியூயார்க்: இந்த ஆண்டு இறு திக்குள் சர்வதேச நாணய நிதியத் திற்கான (IMF) நிதி ஒதுக்கீடு செய்வது முக்கியமானது என அவ்வமைப்பின் தலைவர் கிறிஸ்ட லினா ஜார்ஜீவா கூறியுள்ளார். அதே நேரத்தில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஆண்டுக்கு 10 கோடி டாலர்கள் மதிப்பிலான திட்டங்க ளை செயல்படுத்தும் வாக்குறு தியை வழங்குமாறு ஜி-20 அமைப் பையும் அவர் வலியுறுத்தியுள்ளார். வளர்ந்து வரும் பொருளாதா ரத்தை கொண்ட நாடுகளின் கடன் பாதிப்புகளை திறம்படவும் விரிவான முறையிலும் சர்வதேச நாணய நிதியம் கையாளும் என உறுதியளித்த அவர், புதிய செயல் திட்டத்தை வழங்கவில்லை. கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஆண்டுக்கு 10 கோடி டாலர்கள் அளவிற்கு திட்டங்கள் செயல் படுத்துவதற்கு பலதரப்பு வளர்ச்சி வங்கிகளை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு வளங்களை நாடு கள் திரட்ட வேண்டும் என்றும் அதிக வரிவிதிப்பு சீர்திருத்தங்களை அமலாக்க வேண்டும் என்றும் புதிய ஆற்றல் சக்தி மாற்றத்திற்காக கடன் பெறுவதற்கு நிதி நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் உள்ளூர் கடன் சந்தைகள் மூலம் கடன் வழங்க வேண்டும் என்றும் ஆலோசனைகளை முன்மொழிந் துள்ளார்.