world

img

பிரச்சாரத்தில் இனவெறி, ஆணாதிக்க கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் டிரம்ப்

நியூயார்க்,அக்.29- அமெரிக்காவில் அடுத்த வாரம் ஜனாதிபதி தேர்தல் நடை பெற உள்ள நிலையில் குடியரசுக்கட்சி வேட்பாளரும் அவரது ஆதரவாளர்களும் ஆணாதிக்க, இனவெறி மிகுந்த மற்றும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  அமெரிக்காவின் பிரதான கட்சிகளான ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் இனவெறி, ஆணாதிக்கம் நிறைந்த கொடூரமான ஏகாதி பத்திய போர் ஆதரவுக் கட்சிகளாகவே இருந்து வருகின்றன. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் குடியரசு கட்சி யின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மிக மோசமான முறையில் தனது ஆணாதிக்கத்தையும் இனவெறியையும் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தி வருகிறார்.   ஞாயிற்றுக்கிழமையன்று நியூயார்க்கின் மேடிசன் சதுக்க பூங்காவில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட ஜனநாயக கட்சியினரை கண்டித்து பேசிய டொனால்டு டிரம்ப் புலம்பெயர்ந்த மக்களை கடுமையாக விமர்சித்தும் அவர்களுக்கு எதிராக இனவெறி கருத்துக்களை தூண்டிவிட்டும்  பேசியுள்ளார். சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் புலம்பெயர்ந்த வர்களுக்கு  இடம் கொடுப்பவர்களுக்கு தண்டனை  கொடுக்கப் படும் என்று மிரட்டியுள்ளார். கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக தேர்வானால் மூன்றாம் உலகப் போர் உருவாகி விடும் எனவும் அவரால் சீன ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதியை சமாளிக்க முடியாது எனவும் கூறினார்.  டிரம்ப் ஆதரவாளரான நகைச்சுவை நடிகர் டோனி ஹிஞ்ச்க்ளிப், அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள விருப்பம் உடையவர்கள் எப்போதும் லத்தீன் அமெரிக்கர்களாகத்தான் இருப்பார்கள் என ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்கர்களையும் மிக மோசமாக சித்தரித்துள்ளார்.  மேலும் கியூபாவின் பெயரை குறிப்பிடாமல் மேற்கிந்திய தீவுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட  தீவு  குப்பைகளை கொட்டும் தீவு என்று  அவர் மிகவும் தரம் தாழ்ந்து கியூபாவையும் அந்நாட்டு மக்களையும் விமர்சித்துள்ளார்.