world

img

உலகம் அமைதியை எதிர்நோக்கி பட்டினி கிடக்கிறது: பிரான்சிஸ் போப்

வாட்டிகன் சிட்டி, டிச.25- உணவிற்காக செலவிடப்பட வேண்டிய பணம் ஆயுதங்களுக்காக செலவிடப்படுகிறது. உலகம் அமைதிக்காக பட்டினி கிடக்கிறது என்று கூறியுள்ளார் பிரான்சிஸ் போப்.  கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி அவர் வெளியிட்ட செய்தியில், “வீடற்றவர்கள், புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் ஏழைகளுக்கு மக்கள் உதவவேண்டுமென கேட்டுக் கொண்டார்.  மக்களுக்குத் தேவை ஆறுதலும் அரவணைப்பும் தான். உணவிற்காகவும் அமைதிக்காக வும் உலகின் அனைத்துப் பகுதிகளி லும் ஏங்கும் குழந்தைகளின் முகங்களை நாம் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.  உக்ரைன் போர், சிரியா, மியான்மர், ஈரான், ஹைட்டி மற்றும் ஆப்பிரிக்காவின் சஹேல் பிராந்திய பிரச்சனைகளை தீர்க்க  வேண்டும். எங்கள் காலம் “அமைதி”  என்ற கடுமையான பஞ்சத்தை  எதிர்நோக்கியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இயேசு பிறந்த  புனித பூமியில் இஸ்ரேலியர் களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.