world

img

பன்றியின் இதயம் பொருத்தப்பட்டவர் திடீர் மரணம்  

உலகில் முதல்முறையாக பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் 2 மாதங்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து நகரைச் சேர்ந்த டேவிட் பென்னட் என்பவர் இதயம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தும் இதயம் செயலிழந்து வந்தது. அவருக்கு மாற்று இதயம் கிடைக்காததால் அறுவை சிகிச்சை மூலம் ஜனவரி 7 ஆம் தேதி அன்று மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தப்பட்டது.

மேலும் மனிதருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது மருத்துவ உலகில் இதுவே முதல் முறையாகும்.  இதயம் மாற்றப்பட்ட பிறகு பென்னட் நல்ல உடல் நலத்துடன் இருந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு 2 மாதங்கள் ஆன நிலையில் திடீரென டேவிட் பென்னட் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.  

இது குறித்து மேரிலாந்து மருத்துவர்கள் கூறுகையில், டேவிட் பென்னட்டினுக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட பின்பு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைதொடர்ந்து அவரது மரணத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது என தெரிவித்தனர்.