world

img

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் போராட்டம்!

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் லண்டன் உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் தில்லியில் விவசாயிகள் 12 நாட்களாக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.  3 வேளாண் சட்டங்களை நீக்குவதாக அறிவிக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்து வரும் 8ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளனர். 

முன்னதாக, விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்திருக்கிறார். அரசியல் மட்டுமல்லாது சினிமா, விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் உள்ள இந்திய உயர் மட்ட குழு அலுவலகம் முன்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு "விவசாயிகளுக்கு நாங்கள் இருக்கிறோம்" என்று கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கலிஃபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்பு நூற்றுக்கணக்கான கார்களுடன் வட்டமடித்தும், தொடர் ஹாரன் ஒலி எழுப்பியும் நூதன முறையில் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

;