world

img

அமெரிக்க முற்றுகையை நிராகரியுங்கள்

தடைகள் என்ற பெயரில் போடப்படும் முற்றுகைகள், அந்தந்த நாடுகளின் அரசுகள் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது, மக்களைத்தான் பாதிக்கும் என்று அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் கூறியுள்ளார். தென் அமெரிக்க மற்றும் கரீபியா நாடுகளின் கூட்டமைப்பு(செலாக்) தனது ஏழாவது உச்சி மாநாட்டை அர்ஜெண்டினாவின் தலைநகர் பியூனஸ் அயர்சில் நடத்தி வருகிறது. இந்த மாநாட்டை ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மக்களைப் பாதிக்கும் பொருளாதாரத் தடைகள் தொடர்வதை நாம்  அனுமதிக்க முடியாது. கியூபா மற்றும் வெனிசுலா  ஆகிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் தடைகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் குரலெழுப்ப வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

கடந்த ஓராண்டில் செலாக்கின் தலைமைப் பொறுப்பில் அர்ஜெண்டினா இருந்தது. அந்தக்  காலகட்டத்தில், “நான் அனைத்து நாடுகளின் மரியாதை பாதுகாப்படும் வகையில் பணி யாற்றினேன். அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டிற்குச் சென்று, தென் அமெரிக்க நாடு களின் குரலாக பங்கேற்றேன். தொடர் தடை களால் இன்னும் துயரத்தை எதிர்கொண்டு வருவ தால் தென் அமெரிக்க நாடுகள் மீதான அனைத்துத் தடைகளையும் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அந்த மாநாட்டில் வலியுறுத்தி னேன். கடந்த அறுபது ஆண்டுகளாக கியூபா இந்தத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இதனால் பாதிக்கப்படும் மற்றொரு நாடாக வெனிசுலா உள்ளது” என்று குறிப்பிட்டார். அண்மைக்காலங்களில் பிரேசில், பொலிவியா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் உள்ள அரசியல் நிலவரங்கள் மற்றும் அந்நிய உதவியுடன் நடைபெறும் சதிவேலைகள் ஆகி யவை பற்றிய கவலை இந்த மாநாட்டில் தெரி விக்கப்பட்டது. பொலிவியாவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வேலைகள் நடந்தன. பிரேசிலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற லூலாவைப் பதவியேற்க விடாமல் செய்வ தற்கான நடவடிக்கைகள் இருந்தன. பெருவில், ஜனாதிபதி பெட்ரோ காஸ்டில்லோவை நீக்கி விட்டு, கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரேசில் ஜனாதிபதி லூலா, “கியூபா மீதான அமெரிக்கா வின் பொருளாதாரத் தடைகளை அகற்ற வேண்டும். அமெரிக்காவில் இருப்பது போன்ற  அமைப்பை கியூப மக்கள் அமைக்க விரும்ப வில்லை. தங்களுக்கென்று தனிப்பட்ட அமைப்பை அவர்கள் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அதில் மற்றவர்கள் தலை யிட என்ன இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பி னார். விரைவில் கியூபாவில் சுமூகமானநிலை திரும்பும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொது நாணயத்துக்கு ஆதரவு

செலாக் உறுப்பு நாடுகளுக்கு பொது நாண யம் வேண்டும் என்று பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் கோரி வரு கின்றன. தற்போது நடைபெற்று வரும் செலாக் உச்சி மாநாட்டில் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா மற்றும் அர்ஜெண்டினாவின் ஆல்பெர்ட்டோ பெர்னாண் டஸ் ஆகிய இருவரும் பொது நாணயம் குறித்துப் பேசினர். இந்தக் கருத்தை ஆதரிப்பதாக வெனி சுலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கூறி யுள்ளார். இது பற்றிப் பேசிய அவர், “பொது நாணயத்தை வரவேற்க வெனிசுலா தயாராக இருக்கிறது. அத்தகைய முன்முயற்சியை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று குறிப்பிட்டார். செலாக் உச்சி மாநாட்டில் நிகோலஸ் மதுரோவும் கலந்து கொள்வதாக இருந்தார்.  ஆனால், அவர் உயிருக்கு ஆபத்து இருப்ப தாக உளவுத்துறை தகவல் அளித்ததால் அர்ஜெண்டினா பயணத்தை ரத்து செய்து விட்டார்.  அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ்  அயர்சில் நடைபெறும் மாநாடு வெற்றி பெற  வேண்டும் என்றும், தென் அமெரிக்க மற்றும்  கரீபிய நாடுகளின் ஒற்றுமைக்காக எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றும் மதுரோ அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.