world

img

துனீஷியாவில் மீண்டும் மக்கள் எழுச்சி

துனீஸ், பிப்.20- பெரும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், வட ஆப்பிரிக்க நாடான துனீசியாவில் தொழி லாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். 2011-ஆம் ஆண்டில் துனீசிய மக்கள் பெரும் எழுச்சிகரமான போராட்டங்களை நடத்தி ஆட்சி யாளர்களைத் தூக்கி எறிந்தார்கள். கொள்கை மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தியே அந்த  எழுச்சி ஏற்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் பொருளாதார நெருக்க டியைத் தீர்க்காமல், கூடுதல் பிரச்சனைகளை ஏற்படுத்தி விட்டனர். கொரோனா பெருந்தொற் றால் மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியது.  

அண்மையில் அரபு கருத்து அட்டவணை  மேற்கொண்ட ஆய்வின்படி, நாட்டின் பொருளா தார நெருக்கடியானது ஜனநாயகத்தின் நெருக்க டியாக மாறியது. ஜனநாயக நடவடிக்கைகள் மீது துனீசிய மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்தது. 2011-ஆம்  ஆண்டில் நடந்த எழுச்சிகரமான போராட்டங் களின் விளைவாக உருவாக்கப்பட்ட சில ஜனநா யக அமைப்புகள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.  இந்நிலையில், பொருளாதார நெருக்கடி யைத் தீர்க்காத ஆட்சியாளர்களுக்கு எதிரான  தொழிற்சங்கங்கள் போர்க்கொடி உயர்த்தி யுள்ளன. 2019-ஆம் ஆண்டில் 72 விழுக்காடு வாக்குகளைப் பெற்று பெரும் எதிர்பார்ப்புகளு டன் கெய்ஸ் சையது ஜனாதிபதியாகப் பொறுப் பேற்றார். ஆனால், அவரது ஆட்சியின்போது பெரும்பாலான மக்கள் பெரும் துயரத்தைச் சந்தித்தனர். நாட்டின் பொருளாதாரம் கடனில் மூழ்கியதால் மேலும் கடனை வாங்கி சமாளிக்கும் ஜனாதிபதியின் உத்திக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.  பொருளாதாரப் பிரச்சனைகள் மீது கவ னம் செலுத்தாமல், போராட்டங்களை ஒடுக்கு வதற்கு சையது அரசு முக்கியத்துவம் கொடுத்து  வருகிறது. தங்களின் அடிப்படை உரிமை கள் பறிக்கப்படுவதற்கு எதிராகவும் தொழிற் சங்கங்கள் களம் இறங்கியுள்ளன. மோசமாகி வரும் பொருளாதாரத்தைச் சரி செய்ய நட வடிக்கை எடுக்கக் கோரியும், போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கத் தலைவரை விடுதலை செய்யக் கோரியும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இது தீர்வல்ல!

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளு வதற்கு ஐ.எம்.எப். அமைப்பிடம் கடன் வாங்கு வதற்கான பேச்சுவார்த்தை அரசு நடத்தி வரு கிறது. இது தீர்வாகாது என்று துனீசியாவின் பெரிய தொழிற்சங்கமான யுஜிடிடி தொழிலாளர் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. எட்டு நகரங்களில் பெருந்திரள் பேரணிகளாக ஆர்ப்பாட்டங்கள் மாறின. ஆயிரக்கணக்கானோர் இவற்றில் பங் கேற்றனர். “துனீசியா விற்பனைக்கு அல்ல” மற்றும் “மானியங்களை நீக்காதே” என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுதப்பட்ட பதாகை களை ஏந்தியவாறு தொழிலாளர்கள் வலம் வந்தனர். போராட்டங்களின் வீச்சைத் தடுப்பதற்காக பல முன்னணித் தலைவர்கள் கைது செய்யப் பட்டனர். அதோடு, மக்களின் துயரங்களைப் பற்றிப் பேசி வந்த ஒரு அரசியல்வாதி, ஒரு பத்திரி கையாளர், இரண்டு நீதிபதிகள் மற்றும் தொழிற் சங்கத்தின் மூத்த தலைவர் ஒருவர் ஆகியோர் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது  செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் விடு தலை செய்யப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட் டக்காரர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.  எஸ்ஃபேக்ஸ் என்ற நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மிகப்பெரியதாக அமைந்திருக் கிறது. வேலை நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களுக்கு துனீசியா தயாராகி வருவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடி என்பதாலும், பெரும்பாலான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளதாலும் அனைத்துத் தரப்பு மக்களும் போராட்டங்களில் பங்கேற்பார்கள் என்று பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளன.