world

img

“மருந்தில்லாமல் யாரும் உயிரிழக்க மாட்டார்கள்”

பிரேசிலியா, ஜூன் 9- தனது முந்தைய ஆட்சிக்காலத்தில் அத்தியா வசியமான மருந்துகளை இலவசமாக அல்லது குறைவான விலைகளில் தந்து கொண்டிருந்த திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப் போவதாக பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா அறிவித்துள்ளார். அனைத்து  மக்களுக்கும் மருந்துகள் கிடைக்கச் செய்வதை இந்தத் திட்டம் நோக்க மாகக் கொண்டிருக்கிறது. லூலாவின் ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டத்திற்குப் பெரும் வரவேற்பு இருந்தது. உயிர் காக்கும் மருந்துகளின் விலை களைக் குறைத்ததோடு மட்டுமில்லாமல், அவற்றின் தட்டுப்பாட்டிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தட்டுப்பாட்டைக் காரணம்  காட்டி விலைகளை மீண்டும் ஏற்றிவிடக்கூடாது என்பதற்காகவே அந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது. போல்சானாரோ ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, முதலில் 60 விழுக்காடு நிதி வெட்டப்பட்டது. பின்னர், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது லூலா ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளதால் மீண்டும் திட்டம் நடை முறைக்கு வருகிறது. இடைப்பட்ட காலத்தில் மருந்துகளின் விலைகள் கடுமையான ஏறின. மருந்து நிறுவனங்களுக்கு எக்கச்சக்கமான லாபம் கிடைத்தது. மருந்துகள் பதுக்கப்பட்டும் விலை கள் அதிகரிக்கப்பட்டன. மக்கள் பெருமளவில் அவதிப்பட்டனர். உயிர்காக்கும் மருந்துகளை வாங்க முடியாத பலர் உயிரிழந்தனர். இந்தத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவேன் என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மக்களிடம் இந்த உறுதிமொழியை லூலா தந்திருந்தார்.

லூலாவின் நடவடிக்கைகளுக்கு மருந்து  நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர் களின் லாபத்தில் பெரும் அடி விழப்போவதால் இந்தத் திட்டத்தைத் தடுப்பதற்கான முயற்சி களில் இறங்கியுள்ளார்கள். ஆனால், மக்களுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவை யான மருந்துகளின் விநியோகத்தைத் தடுக்கும் எந்த நடவடிக்கையையும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று பிரேசில் அரசு அறிவித்திருக் கிறது.  “டேபிளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டை வைத்துக் கொண்டு மருந்து வாங்க முடியாமல் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த நிலை  இந்த நாட்டில் மீண்டும் நடக்காது. ஒட்டுமொத்த மக்களுக்குமான மருந்துகளோடு மக்கள்  மருந்தகம் வருகிறது. கூடுதல் எண்ணிக்கை யிலான மருத்துவர்களும் நியமிக்கப்பட்ட உள்ளனர்” என்று பிரேசில் ஜனாதிபதி லூலா குறிப்பிட்டார். மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் 40 மருந்துகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது. அதோடு, மேலும் பல்வேறு மருந்துகளை 90 விழுக்காடு மானியத்துடன் மக்களுக்கு தரப்போகிறார்கள். 

வனப் பாதுகாப்பில் அக்கறை

காடு அழிக்கப்படுவதைத் தடுக்க பிரேசில் அரசு  எடுத்து வரும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள் ளது. போல்சானாரோ ஆட்சியின்போது திட்ட மிட்டு காடுகளை அழிக்கும் பணி நடைபெற்றது. அமேசான் காடுகளை அழிப்பதன் மூலம் அங்கு  இருக்கும் இயற்கை வளங்களைப் பன்னாட்டு நிறு வனங்களுக்குத் தாரை வார்ப்பதற்கான அடித் தளம் அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் இடதுசாரி  ஜனாதிபதி லூலா டி சில்வா பொறுப்பேற்ற பிறகு, காடுகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் காடு அழிக்கப் படுவதற்கு வேகத்தடை போடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம்  வரையிலான காடு அழிப்புடன் ஒப்பிடுகையில்,  நடப்பாண்டு  31 விழுக்காடு குறைவு ஏற்பட்டிருக் கிறது. தற்போது கூடுதல் முனைப்புடன் செயல்பட திட்டம் தீட்டியிருக்கிறார்கள். மே மாதத்தில் பத்து விழுக்காடு அளவிற்கு அழிவைக் குறைத்திருக் கிறார்கள். கடந்த ஆட்சியில் முக்கியமான பகுதி களில் காடுகளை அழிக்கத் தொடங்கி யிருக்கிறார்கள் என்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாறுபாட்டுத் துறையின் செயலாளர் பாவ்லோ கபோபியான்கோ தெரிவித்துள்ளார்.