முதன்முறையாக ஈரான் மற்றும் சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். சீனாவின் முயற்சியால் இரு நாட்டு உறவு மீண்டும் மலர்ந்து வருகிறது. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் உசேன் அமிர்-அப்துல்லாஹியன் மற்றும் சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் பர்கான் அல் சவுத் ஆகியோர் பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதித்துள்ளனர்.