கார்டோம், ஏப்.21- சூடானில் இருதரப்புக்கும் இடை யிலான சண்டை தீவிரமாகி வருவ தால் அந்நாட்டில் உள்ள லட்சக் கணக்கான குழந்தைகள் ஆபத்தான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள் என்று ஐ.நா. அமைப்புகளில் ஒன்றான யுனிசெப் எச்சரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவப் படைகளுக்கும் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது. நான்கு முறை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும் அவை நடைமுறைக்கு வரவில்லை. சர்வ தேச சமூகத்தின் வேண்டுகோள் களை மோதி வரும் ராணுவம் மற்றும் துணை ராணுவம் ஆகிய இரண்டுமே காதில் போட்டுக் கொள்ள மறுக்கின்றன. அவரவர் பணிக்கான வரம்பை மீறாமல் இருப்பதற்கான கட்டுப்பாடுகளை யார் விதிப்பது என்பதிலும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. மோதல் அதிகரித்து வருவ தால் குழந்தைகள் பெரும் ஆபத்தான சூழலில் வாழ்ந்து கொண்டிருக் கின்றன என்று யுனிசெப் செயல் இயக்குநர் காதரின் ரஸ்ஸல் ஒரு அறிக்கை மூலமாகத் தெரி வித்துள்ளார். சண்டை தொடங்கி யதில் இருந்து இதுவரையில் ஒன்பது குழந்தைகள் கொல்லப் பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளன. இரு தரப்பு மோதலால் பாது காப்பான இடங்கள் இல்லாமல் இந்தக் குழந்தைகள் தவித்துக் கொண்டிருக்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஸ்ஸல் அறிக்கையில், “பள்ளிக் கூடங்களிலும், நல மையங்களி லும் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த இடங்களைச் சுற்றிலும் சண்டை நடை பெற்று வருகிறது. குழந்தைகளு க்கான மருத்துவ மனைகளில் அனு மதிக்கப்பட்டிருந்த குழந்தைகள், அங்கிருந்து பாதுகாப்பான இடங் களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக் கின்றன. அந்த மருத்துவமனை களுக்கு அருகில் குண்டுகள் வீசப் பட்டதே அதற்குக் காரணமாகும். பல மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் மற்றும் முக்கியமான கட்டமைப்புகள் குண்டுவீச்சால் அழிக்கப்பட்டுவிட்டன” என்று கூறியுள்ளார். நலிவடைந்த குழந்தை களின் நிலைமை மிக மோசமாக மாறி யிருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர் களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவி கிடைக்காத நிலை உள்ளது. ஊட்டச்சத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், இந்தக் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும் யுனிசெப் எச்சரிக்கிறது. மிகவும் முக்கிய மான மருந்துகள் விநியோகம் செய்யப்படாமல் இருக்கின்றன. மின் சாரம் துண்டிப்பு, எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனை கள் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டன.
ரத்தம் பற்றாக்குறை
தலைநகர் கார்டோமில் உள்ள மருத்துவமனைகளில் 70 விழுக்காடு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கக்கூடிய நிலையில் இல்லை என்று மருத்துவர்கள் சங்கம் கூறி யிருக்கிறது. இதுவரையில் 300க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ள இந்த சண்டையால் ரத்தம், ரத்தம் ஏற்றுவதற்கான கருவி, நரம்பு வழி யாகச் செலுத்தப்படும் திரவங்கள் மற்றும் முக்கியமான மருத்துவக் கரு விகள் பற்றாக்குறை நிலவுகிறது. ஆயிரக்கணக்கானோர் காய மடைந்து, மருத்துவமனைகளை நோக்கி விரைகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப் போதுமான வசதிகள் இல்லை. உடனடியாக, போர் நிறுத்தப்பட்டு மனிதாபிமான ரீதியான சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்று சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. சூடானில் பாதுகாப்புப் பணிக்கா கச் சென்றிருந்த தங்கள் ராணுவ வீரர்கள் 177 பேரையும் பத்திரமாக திரும்ப அழைத்து விட்டோம் என்று எகிப்து கூறியுள்ளது. விமானப்படை யைச் சேர்ந்த 27 பேர் சூடானில் உள்ள எகிப்து தூதரகத்தில் உள்ளனர். நிலைமை சீரான பிறகு, அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வோம் என்று எகிப்து ராணுவம் கூறியிருக் கிறது. நிலைமை சீராவதற்கு தாமதம் ஏற்பட்டால், அவர்களின் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.