வாஷிங்டன், ஜூலை 22- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து தான் விலகுவதாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ஜோ பைடன் அறிவித்துள்ளார். கட்சி மற்றும் நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை ஜனாதிபதியான தீவிர வலதுசாரியான கமலா ஹாரிஸை ஜனா திபதி வேட்பாளராக முன்மொழிந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
சொந்தக் கட்சியில் எதிர்ப்பு
81 வயதான பைடன் தனது பரப்புரை களின் போது பெரும் தடுமாற்றத்துடன் செயல்பட்டு வந்தார். டிரம்ப் மற்றும் பைடனுக்கு இடையே நடைபெற்ற முதல் நேரடி விவாதத்தின் போது பைட னின் விவாதம் அவரது கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியது.
பைடனின் செயல்பாடுகள் கட்சி யின் வெற்றியை பாதிக்கிறது; போட்டி யில் இருந்து பைடன் விலக வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர்கள் கடுமையாக விமர்சித்த னர். ஜனாதிபதி வேட்பாளர்கள் தாமாக முடிவெடுத்தால் மட்டுமே போட்டியில் இருந்து விலக முடியும் என்பதால் அவ ரது கட்சியினர் தொடர் அழுத்தங்களை கொடுத்து வந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்டோர் வெளிப்படையாகவே பைடன் தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டும் என கூறினர். இந்தப் பின்னணியில் பைடன் விலகல் முடிவை அறிவித்துள்ளார்.
மகிழ்ச்சியில் கமலா ஹாரிஸ்
இந்நிலையில் பைடனால் முன்னி றுத்தப்பட்டுள்ள கமலா ஹாரிஸ். “என்னை வேட்பாளராக பைடன் முன் மொழிந்துள்ளது எனக்கு கிடைத்த கவுரவம். கட்சியையும், தேசத்தையும் ஒருங்கிணைத்து தேர்தலில் டிரம்ப்பை வீழ்த்துவேன்” எனத் தெரிவித்துள்ளார். கமலா ஹாரிஸுக்கு எதிராக ஜனநாய கக் கட்சியில் யாரும் போட்டியிட்டு வெற்றி பெறாத வரை அவர்தான் ஜனநா யக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்பது உறுதியாகிவிடும்.
டிரம்ப் விமர்சனம்
இந்நிலையில் குடியரசுக் கட்சி வேட் பாளர் டிரம்ப், ஜனாதிபதி பதவிக்கு பைடன் அறவே தகுதியற்றவர் எனவும் வேட்பாளராக கமலா ஹாரிஸ் களம் கண்டால் தேர்தலில் நான் எளி தாக வென்று விடுவேன் எனவும் தெரி வித்துள்ளார்.