world

img

பல லட்சம் கோடி டாலர் ஆயுதங்கள் விற்பனை

வாஷிங்டன்/டோக்கியோ, பிப்.28- கூட்டாளி நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம் அந்நாடுகளின் மீது சுமையை ஏற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. “வெளிநாடுகளுக்கு ஆயுதங்கள் விற்பனை” என்ற திட்டத்தின் மூலமாகப் பல லட்சம் கோடி டாலர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் திட்டத்தை அமெரிக்கா நடை முறைப்படுத்தி வருகிறது. உலக அமைதிக்கு பலன் என்ற பெயரில் பதற்றங்களை உருவாக்கி, அவற்றைக் காரணமாகக் காட்டி ஆயுதங்களை விற்று வருகிறார்கள். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் நேரடியாக அமெரிக்க  அரசும், ஆயுதங்களை வாங்கும் அரசும் உடன்பாட்டை எட்டுவார்கள். தேவைப்பட்டால், அமெரிக்க அரசு நிதியையும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பயன்படுத்திக் கொள்ள லாம் என்று அரசின் சட்டத்தையும் திருத்தி யிருக்கிறார்கள். எந்த நாட்டிற்கு இந்தத் திட்டம் தேவைப்படு கிறது என்பது அமெரிக்காவின் வெளி யுறவுத்துறை செயலாளர்(அமைச்சர்) முடிவு செய்வார். திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு பாதுகாப்புத்துறை செயலாளர்(அமைச்சர்) வசம் உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றங்களைத் தூண்டிவிட்டு, ஆயுதங்களை விற்கும் பணி  துரிதமாக நடக்கிறது. உக்ரைன்-ரஷ்யா விவ காரத்திலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்பதில் முனைப்பு காட்டப்படுகிறது.

சவூதி அரேபியாவின் ஏமன் முற்றுகை குறித்து சர்வதேச சமூகத்தில் எந்தவித விவாதமும் வராமல் அமெரிக்கா பார்த்துக் கொள்கிறது. அதேவேளையில், சவூதி அரேபியாவிற்கு ஏராள மான ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறார்கள். சவூதி அரேபியாவோடு இணைந்து ஏமனின் இயற்கை வளத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் முற்றுகைக்கு துணையாக நிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் ஆயுதங்களை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களைத் தருவதன் மூலம், மேற்கு ஆசியாவில் பதற்றம் குறை யாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ஜப்பான் ஜப்பானுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி  செய்து அமெரிக்கப் பெரு நிறுவனங்களுக்குப் பெரும் வியாபாரத்தைப் பெற்றுத் தரு வதோடு, அந்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதியத்தைக்கூட, ஜப்பா னின் தலையில் கட்டத் திட்டமிட்டுள்ளனர். ஆயுதங்கள் கொள்முதல், தொழில்நுட்பம் மற்றும் சரக்கு ஆகியவற்றைக் கையாளும் நிறு வனத்தின் முன்னாள் ஊழியர் எழுதிய ஆய்வறிக்கை பல அம்சங்களை அம்பலப்படுத்தி யுள்ளது. ஆயுத உற்பத்தி செய்யும் நிறு வனங்களின் ஒட்டுமொத்த செலவை ஜப்பான் மீது ஏற்றுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

இந்த ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷியோகவா டெட்சுயா, பிரதிநிதிகள் சபையின் நிதிநிலைஅறிக்கைக் குழுவில் வினா எழுப்பியிருக்கிறார். “மக்களின் வரிப்பணத்தில் இருந்து அத்தகைய செலவுகளுக்கு ஜப்பான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமா?” என்று அவர் கேட்டபோது, வேறு வழியில்லாமல் “அந்த வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் திட்டத்தில் சில பிரச்சனைகள் உள்ளன. அதைச் சரிசெய்யும் முயற்சியில் நாங்கள் இருக்கிறோம்” என்று ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹமடா யாசுகாசு விடையளித்திருக்கிறார். டோமாஹாக் ஏவுகணை ஒன்றை வாங்க  வேண்டுமானால், அதற்கு 20 கோடி யென்  தரப்பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு ஏவு கணைக்கும் 30 கோடி முதல் 50 கோடி  யென் வரையில் ஜப்பான் அரசு செலவிடப்போவ தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைச் சுட்டிக்காட்டிய டெட்சுயா, இந்தத்  திட்டத்தின் கீழ் வாங்கப் போகும் ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விலைகள் பற்றி புள்ளி விபரங்களைத் தருமாறு கோரினார். ஆனால்,  அந்த விபரங்களைத் தர ஜப்பான் அமைச்சர்  மறுத்துவிட்டார். பிற கட்சிகளின் உறுப்பினர்களும், இத்தகைய புள்ளிவிபரங் களைத் தராமல் நிதிநிலை அறிக்கை மீது எப்படி விவாதம் நடத்த முடியும் என்ற வினா வைத் தொடுத்தனர்.