world

img

பிராந்திய மருத்துவக் கருவிகள் நிறுவனம்

மெக்சிகோ சிட்டி, மார்ச் 23- லத்தீன் அமெரிக்க மருத்துவப் பொருட்கள் முகமை(அம்லாக்) ஒன்றை உருவாக்க கியூபா, மெக்சிகோ மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள்  முடிவு செய்துள்ளன. இந்த மூன்று நாடுகளும் எடுத்துள்ள இந்த முடிவால் மருந்துகள், மருந்துகளுக்கான மூலப்  பொருட்கள் மற்றும் கருவிகள் ஆகியவை லத்தீன் அமெரிக்க நாடுகளில் தயாரிக்கப்படுவது ஊக்குவிக்கப்படும். மூன்று நாடுகளில் சுகாதா ரத்துறை மற்றும் மருத்துவ மையங்களின் இயக்கு நர்கள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். மருத்து வப் பொருட்கள் மற்றும் மருந்துகள் விநியோ கத்தில் தன்னிறைவை எட்டுவதற்கான அடிப்படை  நடவடிக்கைகள் பற்றி இவர்கள் விவாதித்துள்ளனர். அர்ஜெண்டினாவின் தலைநகர் பயனோஸ் அயர்சில் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடு களின் ஏழாவது உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்தவோ பெட்ரோ மற்றும் மெக்சிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் ஆகிய இருவரும் இந்த அம்லாக்கை உரு வாக்க வேண்டும் என்று முன்மொழிந்தனர். கியூபா வின் ஜனாதிபதி மிகுவேல் டயஸ்-கானெல் இந்த முன்மொழிவுக்கு முழுமையான ஆதரவைத் தெரி வித்தார். கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய காலகட்டத்தில், எத்தகைய சவால்கள் எழுந்தாலும் அவற்றை எதிர்கொள்ள இத்தகைய ஏற்பாடுகள் உதவும் என்று அவர் தெரிவித்தார்.

மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படை யில், கொரோனா பெருந்தொற்றிற்கு அதிகமாக  உயிரிழந்நவர்களின் எண்ணிக்கைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 15 நாடுகளில் எட்டு நாடு கள் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவை யாகும். ஒரு லட்சம் பேருக்கு எத்தனை பேர் உயிர் இழந்துள்ளார்கள் என்ற கணக்கை வைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 15, 2023 ஆம் தேதிக் கணக்குப்படி, கொரோனா பெருந்தொற்றிற்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் இதுவரையில் 6 கோடியே 81 லட்சத்து 63 ஆயிரத்து 526 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொடர்பான நோய்களால் மேலும் 13 லட்சத்து 51 ஆயிரத்து 596 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தற்போது பல்வேறு காரணங்களால் மருந்து கள் மற்றும் மருத்துவக் கருவிகள் எளிதில் கிடைக்காத நிலைதான் லத்தீன் அமெரிக்க நாடு களில் உள்ளது. மருந்துகள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருட்களைப் பெற கடுமையான தடைகளைத் தாண்ட வேண்டியிருக் கிறது. மருத்துவத் துறையில் பெரும் சாதனை களைப் புரிந்து வரும் கியூபா, அமெரிக்காவின் சட்டவிரோத தடைகளைத் தாண்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அத்தகைய தடைகள் இல்லாவிட்டால், உலகம் முழுமைக்கும் மருத்து வத் தீர்வுகளை இன்னும் கூடுதலாகக் கியூபா வால் அளிக்க முடியும்.

இத்தகைய கூட்டமைப்பு உருவானால், மூலப்  பொருட்களை உற்பத்தி செய்யும் சக்தியை அதி கரித்துக் கொள்ள முடியும் என்று கூறும் மூன்று நாடுகளின் சுகாதாரத்துறை இயக்குநர்கள், “எங்கள் நாட்டு மக்களின் மருத்துவத் தேவை களை நிறைவேற்றத் தேவையான மருத்துவக் கரு விகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய வற்றை உருவாக்கிக் கொள்ளும் பலத்தை அதிகப்படுத்த அம்லாக் பெருமளவில் உதவும்” என்று தெரிவித்துள்ளனர். அதோடு, உலகின் பல  மூலைகளில் உள்ள ஏழை நாடுகளுக்கும் பல னளிக்கும் வகையில் இதன் செயல்பாடுகள் இருக்கும் என்றும் உறுதியளித்தார்கள்.

 உனாசுர்

தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் (உனாசுர்) மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பிரேசில் ஜனாதிபதி லூலா கூறியுள்ளார். இந்த ஒன்றியத்தில் அர்ஜெண்டினா, பொலி வியா, பிரேசில், சிலி, கொலம்பியா, ஈக்கு வடார், கயானா, பராகுவே, பெரு, சூரினாம், உரு குவே மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. தற்போது செயல்பாடற்றுக் கிடக்கும் இந்த அமைப்பை புதுப்பிப்பது தனது வெளிநாட்டுக் கொள்கைகளில் முக்கியமாதாகும் என்று லூலா தெரிவித்திருக்கிறார்.