world

img

அமேசான் காடுகளை பாதுகாக்க கூட்டணி முதல் உச்சி மாநாடு முடிவு

பிரேசிலியா, ஆக. 11 - உலகின் மிக பெரிய அமேசான் காடு களை அழிவில் இருந்து பாதுகாத்து  மீட்டுருவாக்கம் செய்ய பிரேசிலில் நடைபெற்ற அமேசான் நாடுகள் உச்சி  மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈக்வடார், கயானா, பெரு, சுரினாம், வெனிசுலா ஆகிய எட்டு தென் அமெரிக்க நாடுகள்  புதிய கூட்டணியை துவங்க அமேசான் காடுகள் பாதுகாப்பு பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன.  உலகின் மிகப்பெரிய மழைக் காடாகவும் புவியின் பல்லுயிர் பெருக்கத்தில் 10 சதவிகிதம் பங்கு  வகிக்கக்கூடிய அமேசான் பகுதிகளில் 50 கோடி மக்களும் நூற்றுக்கணக் கான கோடி மரங்களும் உள்ளன. இத்த கைய அமேசானின் அழிப்பு ஏற்கனவே 17 சதவீதத்தை எட்டிவிட்டது. பிரேசிலின் இடதுசாரி ஜனாதிபதி யான லூயிஸ் இனாசியோ  லூலா டி சில்வா உரையின் துவக்கத்திலேயே இதன் அபாயத்தையும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடந்த ஜூலை மாதம் உலகின் சராசரி வெப்பம் அதி கரித்து இருந்ததையும் குறிப்பிட்டார். 

மாநாடு அறைகூவல்

மேலும் உலகின் பலநாடுகளால் ஏற்படும் இந்த அழிவில் இருந்து காடு களை பாதுகாக்க சில நாடுகளால் மட்டும் முடியாது. எனவே வளர்ச்சி யடைந்த நாடுகளும் இதில் பங்கேற்க வேண்டும் என்று உச்சி  மாநாடு  அறைகூவல் விடுத்துள்ளது.  இந்த மாநாட்டில் காடுகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் காட ழிப்பை முடிவிற்கு கொண்டுவரவும் பத்தாயிரம் வார்த்தைகள் கொண்ட ஒரு திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் பிரேசிலின் சட்ட விரோத காடழிப்பை நிறுத்து வதற்கான உறுதிமொழியையும் புதிய எண்ணெய் ஆய்வை நிறுத்து வதற்கான கொலம்பியாவின் உறுதி மொழியையும் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொண்டன. ஆனால் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பல நாடுகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பழங்குடியின குழுக்களின் முக்கிய கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இது மாநாட்டின்  முழுமையான நோக்கத்தை பூர்த்தி  செய்வதில்  தேக்கத்தை ஏற்படுத்து கிறது. இருந்த போதிலும் 2030 க்குள் காடழிப்பை நிறுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான  பொதுவான நோக்கத்தின் அடிப்படையில்  அனைத்து நாடுகளையும் பிரேசிலின்  ஜனாதிபதியான  லூலா டி சில்வா ஒன்றிணைய வலியுறுத்தியுள்ளார்.

உச்சி மாநாட்டில் பேசிய கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ  பெட்ரோ காலநிலை பாதுகாப்பிற்கான  நடவடிக்கைக்கு ஈடாக வளரும் நாடு களின் கடனை  ரத்து  செய்யும் மார்ஷல் திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும்   உலகளாவிய பொருளா தாரத்தை தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். நாம் அழிவின் விளிம்பில் இருக்கி றோம் என்றால், இந்த தசாப்தத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்க  வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றால், நாம் பேசுவதை தவிர என்ன  செயல்படுத்துகிறோம் என்று அவர் கேள்வி எழுப்பினார். அமேசான் படுகையைப் பகிரும் தென் அமெரிக்க நாடுகளால் 1995இல்  அமைக்கப்பட்ட எட்டு நாடுகளின் குழு வின் முதல் உச்சி மாநாடு இதுவே.மேலும் இந்த மாநாடு 2025 இல் நடை பெற இருக்கும் ஐக்கிய நாடுகளின் காலநிலை பேச்சுவார்த்தைக்கான ஒரு ஒத்திகை மாநாடாக இருக்கும் என்று கருதப்படுகிறது.  மேலும் உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் காடுகள் பாது காப்பில் ஒத்துழைப்பு நல்கவும் எல்லை  கடந்த சுற்றுச்சூழல் குற்றங்களுக்கு எதி ராகப் போராடவும் ஒப்புக் கொண்டுள்ளனர். காடழிப்பை முடிவிற்கு கொண்டுவர  மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் குழு  அர்ப்பணிப்பை தருவார்கள் என்று  நம்புவதாக பிரேசில் ஜனாதிபதி லூலா தெரிவித்துள்ளார்.