அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக 30 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் 40 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் தெருவெங்கும் பனிக்கட்டிகள் குவிந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 48 மாகாணங்களில் மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட திட்டமிட்டிருந்த மக்கள் பலரும் வீடுகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பனிப்புயலால் இதுவரை சுமார் 30 பேர் பலியாகி உள்ளனர்.
நியூயார்க் நகரின் பஃபலோ பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகர மேயர் கேத்தி ஹோச்சல் வரும் செவ்வாய் வரை விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.