அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தொழில் நிறுவனங்களுக்கு இந்தியா 7.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.65 கோடி) செலுத்தியிருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘வெள்ளை மாளிகை விற்பனைக்கு’ எனப் பெயரிடப்பட்ட அந்த அறிக்கையில் அமெரிக்க ஜனநாயக கட்சியின் மேற்பார்வைக் குழு உறுப்பினர்கள், டிரம்ப் மற்றும் அவரது தொழில் நிறுவனங்களுக்கு உலக நாடுகளில் இருந்து செலுத்தப்பட்ட தொகை விபரங்களைப் பட்டியலிட்டுள்ளனர்.
அதில், அமெரிக்காவின் வெளிநாட்டு தொழில்கொள்கைகளை மாற்றியமைத்து, டிரம்ப் தனது வணிகத்தைப் பெருக்கிக் கொண்டார் என்று குற்றம்சாட்டியிருப்பது டன், டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த 2017 முதல் 2020 வரையிலான ஆண்டுகளில் இந்தியா மட்டுமில்லாது 20 நாடுகள் டிரம்பின் நிறுவனங்களுக்கு தொகை செலுத்தியுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பதவியில் இருந்தபோது இந்திய பிரதமருடன் நல்லுறவில் இருந்தார். அந்த வகையில், இந்தியாவில் இருந்து 2.6 லட்சம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் டவருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், டிரம்ப் மேற்கொள்ளும் தொழில்திட்டங்கள் தெற்காசியாவிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கை யில் உள்ளன. மோடியுடனான டிரம்பின் நட்புறவு இதனடிப்படையிலேயே அமைந்திருக்கலாம் என வும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையிடத்திற்கு எதிரே அமைந்துள்ள டிரம்ப் டவரில் ஒரு பகுதி இந்தியாவால் 2004-ல் நிரந்தர தூதர் தங்குமிடத்திற்காக வாங்கப்பட்டது.
அந்த வகையில், வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் 18,500 டாலர்களை மூன்று முறை டிரம்ப் டவருக்கு 2017-ல் செலுத்திய தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.