பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியின் தலைவ ராக பிரேசிலில் முன்னாள் ஜனாதிபதி டில்மா ரூசெப் பொறுப்பேற்றுக் கொண்டார். வங்கியின் தலைமையகம் சீனா வின் ஷாங்காய் நகரில் உள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
சர்வதேச அளவிலான பாத்திரத்தைக் கையாளுவதற்கான வாய்ப்புகள் டில்மாவுக்குக் கிடைக்கும். அதில் அவர் முன்பாக இரண்டு சவால்கள் உள்ளன. ஒன்று, சுற்றுச்சூழலைப் பாதிக்காத திட்டங் களை முன்னிறுத்த வேண்டும். இரண்டா வதாக, ரஷ்யா மீதான மேற்கு நாடுகளின் தடைகள் பிரிக்ஸ் அமைப்பின் திட்டங்களைப் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி போல்சானாரோவால் நியமிக்கப்பட்ட மார்க்கோஸ்ட்ரோஜ்யோவுக்குப் பதிலாக டில்மா பொறுப்பேற்றிருக்கிறார். 2025 ஆம் ஆண்டு வரையில் இவர் தலைவராகப் பணிபுரிவார். தற்போது ஐந்து உறுப்பு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் வங்கதேசம், எகிப்து மற்றும் உருகுவே ஆகிய நாடுகளின் திட்டங்களுக்கு நிதியுதவியை புதிய வளர்ச்சி வங்கி செய்து வருகிறது.