அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் ஏற்பட்ட கிளாடிட் புயல் பாதிப்பால் தென்கிழக்கு பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் நெடுஞ்சாலையில் குழந்தைகள் சென்ற பேருந்து எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்துக்குள்ளான மற்றொரு வாகனத்தில் பயணித்த ஒரு நபரும், குழந்தையும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.