world

img

பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை! வெள்ளத்தில் மூழ்கிய 3100 கிராமங்கள்

பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத மழையால், பஞ்சாபின் 3,100 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி, 24 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் பெய்த கனமழையால் அங்குள்ள முக்கிய நகரங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினாலும், அம்மாகாணத்தில் உள்ள 3100க்கும் மேற்பட்ட கிராமங்களும், 2900 குக்கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் 24 லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, பஞ்சாப் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் உணவு உற்பத்தியில் முதன்மையாக விளங்கும் பஞ்சாபில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், அந்நாட்டில் மிகப் பெரியளவில் உணவுத் தட்டுப்பாடு உருவாகக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

பஞ்சாபின் வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அங்கு 50 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் ஏராளமான கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தொடர்ந்து அங்கு மழை பெய்து வரும் நிலையில் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.