world

img

வர்த்தக சவால்களை எதிர்கொள்ளுமா சமூகம்? உலக வர்த்தகக் கழகம் ஆலோசனை

ஜெனீவா, ஜூன் 14- சர்வதேச சமூகம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதிக்க உலக வர்த்தகக் கழக உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்ற 12வது மாநாடு ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டம் பற்றிக்  குறிப்பிட்ட கழகத் தின் தலைமை இயக்குநர் கோசி ஓகோஞ் சோ இவீலா, “தற்போது உலகம் எதிர்கொண் டுள்ள பிரச்சனைகளை எந்த நாடும் தனி யாகத் தீர்த்துக் கொள்ள முடியாது. இது உலகம் இணைந்து நின்று செயல்படுவ தற்கான தருணம் “ என்று குறிப்பிட்டிருக்கி றார். 2017 ஆம் ஆண்டில் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையில் அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனோஸ் அயர்சில் 11வது மாநாடு நடை பெற்றது. 164 உறுப்பினர்கள் இருக்கும் உலக வர்த்தகக் கழகத்தில், அமைச்சர்க ளின் மாநாடுதான் முடிவுகளை எடுக்கக் கூடிய உயர்ந்தபட்ச அமைப்பாகும்.  2020 ஆம் ஆண்டில் கஜகிஸ்தானில் இந்த 12வது மாநாடு நடைபெற்றிருக்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று காரணமாக அப்போது நடக்கவில்லை. தள்ளிப்போடப்பட்ட மாநாடு தற்போது ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறுகிறது. 

கடும் எதிர்ப்பு
அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற அனுமதிக்காததால் அரசு சாரா அமைப்பு கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாது காப்பு தொடர்பான காரணங்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது என்று 50க்கும் மேற்பட்ட அமைப்புகள் கூறியுள்ளன.  இது குறித்து அந்த அமைப்புகள் வெளி யிட்ட அறிக்கையில், “மேலும் ஜனநாய கத்தை நீர்த்துப் போகச் செய்யவே இந்த ஏற்பாடுகள் நடக்கின்றன. பகாசுர நிறுவ னங்களை மேலும், மேலும் வரவேற்கி றார்கள். எங்களைப் போன்ற தொண்டு நோக்கத்துடன் செயல்படும் அரசு சாரா அமைப்புகளிடமிருந்து மேலும் விலகி யுள்ளனர். பாதுகாப்பு தொடர்பான கார ணங்கள் என்ன என்பதைக்கூட இதுவரை யில் தெரிவிக்கவில்லை. இத்தகைய தடை கள் நிரந்தரமானமாக மாறி விடும் அபாயம் உள்ளது” என்று கூறியுள்ளன.

♦ கொரோனா பெருந்தொற்று

கொரோனா தடுப்பு  ஏற்பாடுகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் காப்புரிமைகளை தற்காலிகமாக  நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. குறிப்பாக, ஏழை நாடுகள் பெரும் நெருக்கடியில் சிக்கியிருந்தன. அமெரிக்காவோ தடுப்பூசிகளைத் தவிர மற்ற அனைத்திற்கும் காப்புரிமை தொடர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. அமெரிக்கா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை இணைந்து ஒரு நகல் திட்டத்தை உருவாக்கியிருக்கின்றன.

♦ மீன்பிடித்தலுக்கான மானியம்

அளவுக்கதிகமாக  மீன்களைப்  பிடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே உள்ளது. அதைத் தடுக்கவும், மீன்வளத்தைப்  பாதுகாக்கவும், மீன்பிடித்தலுக்காக வழங்கப்படும்  மானியங்களை நிறுத்த வேண்டும் என்ற  ஆலோசனை முன்வைக்கப்பட்டது.  இது குறித்து 20  ஆண்டுகளாக  பேச்சுவார்த்தை  நடக்கிறது. வளரும் நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

♦ சீர்திருத்தம்

உலக வர்த்தகக்  கழகத்தை சீர்திருத்த வேண்டும் என்ற கோரிக்கையை  அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும்  ஆப்பிரிக்க   நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. தகராறு ஏற்பட்டால் அதைத் தீர்ப்பதற்கான  வழிமுறைதான் மிகவும் அவசர, அவசியமான ஒன்றாக உள்ளது. மேல்முறையீடு  தீர்ப்பாயம் 2019 ஆம் ஆண்டிலிருந்து முடங்கிக் கிடக்கிறது. அதை  முடுக்கி விட வேண்டும்  என்ற கோரிக்கையும்  கிடப்பில்  போடப்பட்டுள்ளது.

♦  மின்னணு வர்த்தகம்

மின்னணு  பரிவர்த்தனைகளில் சுங்க வரி போடக்கூடாது என்று உலக வர்த்தகக் கழகத்தின் உறுப்பு நாடுகள் 1998 ஆம் ஆண்டிலிருந்து ஒப்புக் கொண்ட ஒன்றாகும். இதை நீட்டிப்பதா வேண்டாமா என்று இந்த 12வது மாநாட்டில் பேசப் போகிறார்கள். இந்தியா  மற்றும் தென் ஆப்பிரிக்க ஆகிய நாடுகள் இது வருமானத்தைப் பாதிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளன. 2019 ஆம் ஆண்டிலிருந்து 86 நாடுகள்  இதைப் பற்றி வலியுறுத்தி வருகின்றன. இந்த  மாநாட்டில் முடிவு  எட்டப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

♦ உணவுப் பாதுகாப்பு
விவசாயம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் இந்த மாநாட்டில் பேசப்பட இருக்கின்றன. ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியால் நிலைமை மோசமாகியிருக்கிறது. பணக்கார நாடுகளின் விவசாய மானியம் உலக வர்த்தகத்தைச் சிதைப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. விவசாயப் பொருட்கள் ஏற்றுமதிக்கு வழங்கப்பட்ட மானியத்தை ரத்து செய்ய 2015 ஆம் ஆண்டில் உறுப்பு நாடுகள் முடிவெடுத்தன. இதை உள்நாட்டிலும் நடைமுறைப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. பணக்கார நாடுகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று பல உறுப்பினர்கள் கூறியிருக்கிறார்கள்.