காசா, ஆக. 30 - காசாவில் குழந்தைகளுக்கு போலி யோ தடுப்பு மருந்து வழங்குவதற் காக, செப்டம்பர் 1 முதல் 3 நாட்களுக்கு மட்டும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாட்களும் காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை போரை நிறுத்த ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது, ஏறத்தாழ ஓராண்டாக இஸ்ரேல் கொடூர யுத்தம் நடத்தி, அப்பாவி மக்க ளை கொன்றழித்து வருகிறது. இதில், காசாவின் சுகாதார கட்டமைப்புகள் அனைத்தையும் இஸ்ரேல் ராணு வம் அழித்து விட்டது. மேலும் பாலஸ் தீனர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், மருந்துகளை தொடர்ந்து தடை செய்து வைத்துள்ளது.
இதன் காரணமாக லட்சக்கணக் கான குழந்தைகள் தோல் தொற்று நோயால் பாதிக்கப்பட போவதாகவும், ஏற்கனவே தோல் தொற்று பரவ துவங்கிவிட்டது எனவும் கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பு அபாய ஒலி எழுப்பியது.
அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் காசாவில் பாலஸ்தீனர்கள் பயன்படுத்துகிற குறைந்த பட்ச (மாசடைந்த) நீரில் போலியோ வைரஸ்கள் கண்டறியப் பட்டுள்ளது என்ற அதிர்ச்சித்தகவலை உலக சுகாதார அமைப்பு வெளி யிட்டது.
மேலும் இந்நிலை தொடர்ந்தால் ஆயுதங்களால் பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதை விட அதிகளவு வைரஸ் நோய் தொற்றுக்களால் இறக்க நேரிடும் என எச்சரித்தது. மேலும் காசாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு போலியோ தொற்று கண்ட றியப்பட்டுள்ள நிலையில் 6.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி செலுத்த, ஐ.நா. அவை யுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு தயாராக உள்ளதாகவும், காசாவில் உள்ள குழந்தைகளுக்கு இரு சுற்று போலியோ மருந்து செலுத்த தயாராக உள்ளதாகவும் மருந்து கொடுப்பதற்காக இடைக் கால போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கடந்த ஒரு மாத மாக கோரிக்கை வைத்து வந்தது.
இந்நிலையில், காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மூன்று நாட்களுக்கு போரை நிறுத்த ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. உலக சுகாதார அமைப்பு இந்த செய்தியை உறுதிப் படுத்தியுள்ளது. இந்த போர் நிறுத்தம் காசாவை, தெற்கு காசா, மத்திய காசா, வடக்கு காசா என மூன்று பகுதி களாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் மூன்று நாள் போர் நிறுத்தம் அமல் படுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் ஒரு நாள் (நான்கா வது நாளாக) போர் நிறுத்தத்தை நீட்டி த்துக் கொள்ளவும் ஒப்பந்தத்தில் இட மளிக்கப்பட்டு உள்ளது.
எனினும், இந்த ஒப்பந்தத்தை இஸ் ரேல் ராணுவம் மதித்து நடக்குமா, அல்லது வழக்கம்போல மீறுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.