இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
காசாவில் 13 செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 50 பத்திரிகையாளர்கள் அடங்கிய குழு, களத்திற்குச் சென்று 4 மாதங்களாக மேற்கொண்ட விசாரணையில் மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது.
பத்திரிகையாளர்கள் அடையாள உடை, அட்டை அணிந்திருந்தும் அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, பத்திரிகை சுதந்திரம் மீதான வெளிப்படையான தாக்குதல் இது என பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளித்துள்ள இஸ்ரேல் ராணுவம், பத்திரிகையாளர்களை தாக்க வேண்டும் என்கிற முனைப்புடன் தங்கள் நாட்டு ராணுவம் செயல்படவில்லை என்றும், ஹமாஸ் படைகளின் இருப்பிடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள வான்வழித் தாக்குதல்களில் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடுமென இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் பதிலை யாரும் நம்புவதாக இல்லை. ஏனென்றால் சர்வதேச போர் விதிகளை மீறி மருத்துவமனைகள் மீதும், அகதிகள் முகாம்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் கொடூரமான தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது