world

img

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டரில் 7.3 ஆக பதிவு

தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிலி நாட்டின் கடற்கரை நகரமாக அன்டோஃபகாஸ்டாவின் கிழக்கே 265 கிலோ மீட்டர் தொலைவில் நேரிட்டதாகவும், பூமிக்கு அடியில் 126 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் கடற்கரை நகரத்தில் ஏற்பட்டிருந்தாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

முன்னதாக கடந்த ஜனவரியில், வடக்கு சிலியின் டாராபாக்காவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  பசிஃபிக் ரிங் ஆஃப் ஃபயர் எனும் பகுதியில் சிலி நாடு அமைந்துள்ளது. பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் என்பது பசிபிக் பெருங்கடலின் படுகையில் உள்ள ஒரு முக்கிய பகுதியாகும். அங்குப் பல பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் அந்தப் படுகையில் அமைந்துள்ள சிலியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாகவே இருக்கிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு சிலி நாட்டில் 8.8 ரிக்டரில் ஏற்பட்ட பூகம்பத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து குறிப்பிடத்தக்கது. ,