world

img

செவித்திறனை மீட்டு கியூபா சாதனை

ஹவானா, மார்ச்  10 - உட்செவிச்சுருள் வைப்புத் திட்டத்தின் கீழ் கியூபாவில் ஏராளமானோருக்கு அவர்களின் செவித்திறனை மீட்டுத்தந்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். உலகம் முழுவதும் இந்த உட்செவிச்சுருள் வைப்புத் திட்டம் நடைமுறையில் உள்ளது. கியூபாவில் மற்ற நாடுகளை விட உயர் தொழில் நுட்பமும், துல்லியமான முறையில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் திறனும் இருக்கிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரையில் இந்த சிகிச்சையைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஹவானாவில் மையப் பகுதியில் உள்ள பெட்ரோ போர்ராஸ்-மார்ஃபன் மருத்துவமனைக்கு அன்றாடம் ஏராளமானோர் செவித்திறன் சிகிச்சைக்காக வருகிறார்கள். புரட்சி நடந்ததில் இருந்தே கியூபா செவித்திறன் குறைபாட்டை சரி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. பலரும் தங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது என்று சொல்கிறார்கள். பெட்ரோ போர்ரஸ்-மார்ஃபன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் ஒருவரான லியாண்ட்ரா மோரினோ, “எனக்கு பிடித்தமான பாடல்களைக் கேட்க முடிகிறது. மழையின் சத்தம் காதில் விழுகிறது. என்னுடைய நண்பர்களுடன் வெளியில் செல்கிறேன். இவையெல்லாம் இந்தத் திட்டத்தின்கீழ் கிடைத்த சிகிச்சையால்தான் சாத்தியமானது” என்கிறார். இந்த சிகிச்சைக்குத் தேவையான கருவிகளை இறக்குமதி செய்ய கியூபா மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. அந்தத் தடைகளை மீறி மக்களுக்கு இந்த செவித்திறன் குறைபாடு சிகிச்சையை கியூபாவின் மருத்துவர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்கள். சிகிச்சையைப் பெற்ற பலரும் தங்கள் திறனை மீண்டும் பெற்று பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சொந்த முயற்சியால் மிக உயர்ந்த தொழில்நுட்பத்தைப் பெறுவதில் கியூபா வெற்றி கண்டுள்ளது.