ஐ.நா., பிப்.26- உக்ரைன் நிலைமை பற்றிய வரைவு தீர்மானம் ஒன்றை ஐ.நா பாது காப்பு சபை 25ஆம் நாள் அங்கீக ரிக்கவில்லை. இருப்பினும் உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்கும் வழிமுறை யைத் தேடுவதை ஐ.நா ஒரு போதும் கைவிடாது என்று ஐ.நாவின் தலைமை செயலாளர் அந்தோணியோ குட்ரஸ் தெரிவித்தார். ரஷ்யா உக்ரைனின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு கண்டனம் தெரிவித்த இவ்வரைவு தீர்மானத்தை அமெரிக்காவும் அல்பேனியாவும் ஐ.நாவுக்கு ஒப்ப டைத்தன. ஐ.நா பாதுகாப்பு சபை யின் வாக்கெடுப்பு முடிவின்படி 11 நாடு கள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் ரஷ்யா எதிராகவும் வாக்களித்தன. சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீ ரகம் ஆகிய மூன்று நாடுகள் இவ் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.