ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் பலி
ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேல் பகுதியில் நடத்திய டிரோன் தாக்குதலில் 4 இஸ்ரேல் வீரர்கள் படுகொலையாகியுள்ளனர். ஞாயிறன்று ராணுவப் பயிற்சி முகாம் மீது நடைபெற்ற இந்தத் தாக்குதலில் வீரர்கள் பலியானதை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. செப்டம்பர் 23 அன்று லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தத் துவங்கிய பிறகு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய மிக மோசமான தாக்குதலாகும்.
இலங்கையில் வெள்ளம்: 1.3 லட்சம் மக்கள் பாதிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ளத்தின் காரணமாக 1.3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 பேர் பலி யாகியுள்ளதாகவும் அந்நாட்டு பேரிடர் மேலாண் மை மையம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக் கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதால் 7000 க்கும் அதிகமான மக்கள் நிவாரண மையங்க ளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடற்படை மற்றும் ராணுவத்தை அந்நாட்டு அரசு மீட்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
3 ஆவது முறையாக டிரம்ப் மீது கொலை முயற்சி?
குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பா ளரான டொனால்டு டிரம்ப்பை கொலை செய்யும் 3 ஆவது முயற்சி தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கோ செல்லாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத் தின் போது போலி நுழைவுச்சீட்டு மற்றும் துப்பாக் கியுடன் வந்த 49 வயதான வெம் மில்லர் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் பிறகு இது டிரம்ப்பை கொலை செய்யும் மூன்றாவது முயற்சி என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காசா - இஸ்ரேல் போர் : 138 பத்திரிகையாளர்கள் படுகொலை
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்கு தலில் இதுவரை 138 பத்திரிகையா ளர்கள் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு ( IFJ) தெரிவித்துள்ளது. கடந்த 2023 அக்டோ பர் மாதம் இஸ்ரேல் - காசா போர் துவங்கிய ஓராண்டில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 128 பத்திரிகையாளர்கள், லெபனானைச் சேர்ந்த 5 பேர், இஸ்ரேலைச் சேர்ந்த 4 பேர், சிரியாவைச் சேர்ந்த ஒருவர் என 138 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.
இஸ்ரேலுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை அனுப்பும் அமெரிக்கா
இஸ்ரேலுக்கு புதிய அதிநவீன வான் பாது காப்பு அமைப்புகளை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இஸ்ரேலைப் பாதுகாப்ப தற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டு பேசியுள்ளார். அக்டோபர் 1 அன்று இஸ்ரேல் மீது ஈரான் 400 க்கும் மேற்பட்ட ஏவுகணை களை ஏவியது இந்த ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை மீறி இஸ்ரேலுக் குள் தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.