ரஷ்யாவிற்குள் உக்ரைன் தாக்க பிரிட்டன் பிரதமர் ஒப்புதல்
உக்ரைன் தங்கள் நாட்டின் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்தலாம் என லேபர் கட்சி பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஒப்புதல் கொடுத்துள்ளார். ஏகாதிபத்திய நாடுக ளிடம் வாங்கும் ஆயுதங்களில் உக்ரைன் அரசு ஊழல் செய்து வருகிற குற்றச்சாட்டு உள்ளது.மேலும் அங்குள்ள நாஜி படை பிரிவுகளுக்கு நேரடியாக அமெ ரிக்க ஆயுதங்களை கொடுக்க உத்தர விட்டுள்ள சூழலில் இங்கிலாந்து பிரத மரின் புதிய முடிவு போரை மேலும் நீடிக்கச் செய்யும்.
பெலாரஸ் - சீனா ராணுவப் பயிற்சி
பெலாரஸ் - சீனா ஆகிய இரண்டு நாடுகளும் நேட்டோ உறுப்பினரான போலந்து எல்லைக்கு அருகே ராணுவப் பயிற்சி நடத்துகின்றன. நேட்டோ கூட்டமைப்பின் 75 ஆவது உச்சி மாநாடு நடைபெறும் அதே வேளையில் ரஷ்யா வின் நெருங்கிய நட்பு நாடுகளின் இந்த கூட்டு ராணுவப்பயிற்சி ரஷ்யா மற்றும் ஆசியாவிற்குள் நேட்டோ போர் திட்ட மிடலுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகை யில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்கன் அகதிகளுக்கு ஓராண்டு அவகாசம்
15 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் தங்கும் காலத்தை நீடித்துள்ளதாக பாக் அரசு அறிவித்துள்ளது. அகதி களை நாடு கடத்தும் வேலையை பாக் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆப்கன் அகதிகள் தங்களுடைய பதிவுச் சான்றுகளுடன் 2025 ஜூன் 30 வரை அந்நாட்டில் தங்கலாம் என பாக் பிரதமர் ஷேபாஸ் ஷெரிப் அறிவித்துள்ளார். எவ்வா றாயினும் அகதிகள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என அந்நாட்டு அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
வெப்ப அலையால் ஒற்றைத் தலைவலி
காலநிலை மாற்றத்தினால் வீசி வரும் வெப்ப அலைகளின் காரணமாக சுமார் 3.9 கோடி அமெரிக்கர்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெ ரிக்க மைக்ரேன் அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது.மக்களிடம் மேற்கொண்ட ஆய்வில் ஒற்றைத் தலைவலி உள்ளவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான நபர்கள் தங்களின் தலைவலி க்கு காரணமாக அதிக வெப்பநிலையை குறிப்பிட்டுள்ளனர்.
வெனிசுலா கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு
கடந்த ஜூன் மாதம் வெனிசுலா அதிகபட்ச கச்சா எண்ணெய் உற்பத்தியை செய்துள்ளதாக பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) தெரிவித்துள்ளது. கடந்த மாதம் நாளொன்றுக்கு 9,22,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியாகியுள்ளதை அக்கூட்டமைப்பு வெளி யிட்டுள்ள அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இது மே மாதம் செய்யப் பட்ட உற்பத்தியை விட 12 ஆயிரம் பீப்பாய்கள் அதிகமாகும்.